Friday, 26 May 2017

பத்திரமா பாத்துக்கணும்




ஒரு முரட்டுத்தனமான ஒரு ஆள்...
அவன பார்த்தா அந்த ஊருல
எல்லோரும் பயப்படுவாங்க...

அதே ஊர்ல ஒல்லியா ஒரு ஆள்
அவன பார்த்தா எல்லோரும்
கேலியா பார்ப்பாங்க...

இந்த முரட்டுத்தனமான ஆள்
தெருவுல நடந்துபோன...
எல்லோரும் ஒதுங்கிப்போவாங்க,
பயந்த படி...!!!

அத காரணமா வச்சி
சின்ன சின்ன பஞ்சாயத்து பண்ணி
பிழைக்க ஆரம்பிச்சான்...

அவனுக்கு ஒருத்தன் மேல
கோபம் வந்தா... அவன் கண்ணா பார்த்து
“தொலைச்சிப்புடுவேன் தொலைச்சின்னு..”
சொல்லுவான்
அதுலேயே பாதிபேர் பயந்து ஓடிருவாங்க..!!

ஒருநாள்...
அந்த ஒல்லியா நோஞ்சான் மாதிரி இருக்குறவன்
எதையோ ரொம்ப நேரம்
குனிஞ்சி தேடிக்கிட்டே இருக்கான்....

இத அந்த முரடன்
ஆரம்பத்துல இருந்து பாத்துட்டே இருக்கான்..

முரடனுக்கு ஆர்வம் தாங்கமுடியல...
அப்படி அவன் எதைத்தான்
ரொம்ப நேரமா தேடிக்கிட்டு இருக்கான்னு...

நேரடியா அவன்கிட்டயே போய் கேட்டுட்டான்
“அப்படி எதைத்தான் ரொம்ப நேரமா தேடுறேன்னு..”

அதுக்கு அவன் சொல்றான்...
இல்ல.. கையில இருந்த மோதிரம்
ரொம்ப நாளா லூசா இருந்துச்சி...
இன்னைக்கு அது காணாம போச்சி...
அதான் தேடிக்கிட்டு இருக்கேன்னு....

உடனே முரடன் சொல்றான்...
அதுவே தம்மாத்துண்டு மோதிரம்
அத உன்னால பத்திரமா பார்த்துக்க முடியலையா..?

நா அத பத்திரமாத்தான் பார்த்துட்டு இருந்தேன்...
இன்னைக்கும் வழக்கம் போல
பத்திரமா பார்க்கலாம்னு கைய பார்க்கும் போதுதான்...
அது காணாம போயிருந்துச்சின்னான்
அந்த நோஞ்சான்....

இந்த பதிலா கேட்ட முரடனுக்கு
லைட்டா கோபம் வந்தது...
இருந்தாலும்...

அதான் லூசா இருக்குன்னு தெரியுதுல...
அப்ப அத பத்திரமா கலட்டி
வீட்டுல வைக்க வேண்டியதுதானா...?

இனிமே அத பத்திரமா பாத்துக்கனும்னுதான்
கலட்டி வீட்டுல வச்சிடலாம்னு
நினைச்சேன்... அத கலட்டுரதுக்காகத்தான்
கைய பார்த்தேன்...
அப்பத்தான் அது காணாம போச்சின்னே
எனக்கு தெரிய வந்துச்சின்னான்...

இந்த பதில கேட்ட முரடனுக்கு கோபம்
உச்சத்துக்கு போனாலும்... விடுறதா இல்ல...
திரும்ப திரும்ப கேள்வி கேட்டுட்டே இருக்கான்...
நோஞ்சான் அதுக்கு பதில் சொல்லிட்டே இருக்கான்...

ஒரு கட்டத்துல கடுப்பான முரடன்...
ஏன்டா சின்ன மோதிரத்தைய்யே உன்னால
பத்திரமா பாத்துக்க முடியல...
இறக்கப்பட்டு உன்கிட்ட பேசுனா...
நீ எடக்கு மடக்கா பதில் சொல்லுற...
முட்டாப்பயலாடா நீ...
இதுக்கப்புறம் எதுனா பேசுனா...
தொலைச்சிடுவேன் தொலைச்சின்னு...
சொல்லிட்டு முரடன் கோபமா கிளம்ப ஆரம்பிச்சிட்டான்...

உடனே அந்த நோஞ்சான் போறவனா கூப்டு சொல்றான்...
என்னையறியாம சின்ன மோதிரத்த தொலைச்சிட்டு...
அத தேடுற நா முட்டாள்னா....
உனக்கு முன்னாடி குத்துக்கல்லாட்டம்
நிக்கிற என்ன தொலைச்சிடுவேன்னு சொல்லுற
நீ என்ன அவ்வளவு பெரிய அறிவாளியா...????

இதுக்கப்புறம் முரடனால கேள்வி கேட்க முடியல...!!

மத்தவங்க பிரச்சினைல
தேவையில்லாம மூக்க நுழைக்கிறது கூட
தப்பில்ல...!
ஆனா முழுசா நுழைச்சா
இதுதான் கதி...!!


written by  க.முரளி (spark MRL K)

Saturday, 20 May 2017

சுயநலம்




நாம்பாட்டுக்கு சிவனேன்னு நடந்துபோனவன 
ஒரு கிழவி... 
ரொம்ப நேரமா உத்துப்பார்க்க வச்சிடுச்சி...

காரணம் அந்த கிழவி ஒரு கடைய
வெறிக்க வெறிக்க பாத்துக்கிட்டே இருந்தது..!.

அப்ப நேரம் இரவு பத்து மணிக்கு மேல இருக்கும்...
சாலையோர வாகனத்தின் எண்ணிக்கை கூட
குறைஞ்சிடுச்சி...

அந்த கிழவிய பார்த்தா
அப்படி ஒன்னும் பெருசா தெரியல...

அழுக்கு சட்டையும்.. பாவாடையுமா
கையில ஒரு துணிப்பையுடன் நிக்குது...
எப்படியும் பிச்சையெடுத்துதான்
தன்னோட வாழ்க்கைய ஓட்டுதுன்னு நல்லா புரியுது...

சரி... ,மணி இப்ப பத்துக்கு மேல ஆச்சி..
அந்த கிழவிக்கு இப்ப கண்டிப்பா பசிக்கும்...
அதுனால தான்...
சாப்பாட்டுக்கு ஏதாவது தருவாங்கன்னு
அந்த கடைய பாக்குதுன்னு நினைச்சா
அது ஒரு மெடிக்கல் சாப்...

கொஞ்ச நேரத்துல அந்த கடையையும் பூட்டி..
கடைக்காரர் வாசல்ல சூடம் ஏத்த
ஆரம்பிச்சிட்டார்...

அந்த கிழவி இப்ப கடைய பாக்குறத விட்டுட்டு
அந்த சூடத்த பார்க்க ஆரம்பிச்சிடுச்சி...
அது எப்ப அனையும்னு...

எனக்கு பொறுமை தாங்கல..
என்னதா பண்ண போறேன்னு...
அந்த கிழவிட்டேயே போய் கேட்டுடலாம்னு
இருந்துச்சி...

அதுக்குள்ளே அந்த சூடம் அணைஞ்சிடுச்சி..!

அணைந்த வேகத்துல அந்த கிழவி
கடைக்கிட்ட போய் வாசல்ல உக்காந்து...
தன்னோட பையில்... எதையோ தேடி
கடைசில மூடியில்லாத ஒரு பேனாவ எடுத்துச்சி...

எனக்கு இப்ப ஆர்வம்... இன்னும் அதிகமாச்சி...
என்ன செய்யப்போறாலோ அந்த கிழவின்னு..!

கொஞ்ச நேரம் அமைதியா எதியோ யோசிச்சவ
மறுபடியும் பையில எதையோ தேட ஆரம்பிச்சிட்டா...!!

எனக்கு அங்க நின்னு நின்னு
கால் வலியே வர ஆரம்பிச்சிடுச்சி...

கடைசீல கையில் சின்னதா ஒரு
விக்ஸ் டப்பாவ எடுத்து..
அந்த டப்பாவின் இடுக்குல இருக்குற
கொஞ்ச விக்ஸ்சையும் பேனாவின் முனையால்
நோண்டி எடுத்து...
தன்னோட காலுல தேச்சிட்டு...
நிம்மதியா படுத்து... ரெண்டு நிமிசத்துல குறட்டை விட்டு தூங்கிடுச்சி...

சரி... இனிமே இங்க நின்னு
என்ன புரோஜனம்...  கிளம்பலாம்னு 

நினைக்கும் போது... என்னோட கால் வலிக்கு
மருந்து வாங்கலாம்னு தோணுச்சி...

திரும்பி பார்த்தா
இருந்த ஒரு கடையும் பூட்டியாச்சி....!

வேற வழியில்லாமல்
எப்பொழுதும்போல் ஒரு சுயநலவாதியாக
நடந்துபோய் படுத்து தூங்கிட்டேன்
என்னோட அறையில..!!!


written by க.முரளி (spark MRL K)

நிம்மதியா ஒருவாய் சோறு....



இரண்டு சின்ன ஊர்...
அதுக்கு இரண்டு தலைவர்கள்...

அந்த
இரண்டுபேருக்கும் இடையே...
போட்டியை விட பொறாமை அதிகமாக இருக்கும்...!!

ஆனா இந்த ரெண்டு பேரின்
நோக்கமும் ஒன்னுதான்...

சின்னதா இருக்குற இந்த ஊர...
எப்படியாவது பெரியதா ஆக்கனும்னு

அனா அதுக்குன்னு
சொந்தமா யோசிக்க தெரியாது...
ஏற்கனவே வளர்ந்த நகரத்த பார்த்து
காப்பி அடிப்பானுங்க...

பக்கத்து ஊர்ல
புதுசா பஸ்டாப் கட்டுனா...
இவனுங்க ஒரு பஸ்டாண்டைய்யே கட்டுவாங்க...

இந்த ரெண்டு தலைவர்ல ஒருவர்
தன்னோட ஊருக்கு
ரயில்வே ஸ்டேசன் கொண்டுவந்தா...!!

இன்னொருவர் தலைவர்
ரயில்வே ஸ்டேசனோட சேர்த்து ஏர்போர்ட்டையும்
கொண்டுவர முயற்சி பண்ணுவார்...

இப்படியே
ஒருத்தர் மேல ஒருத்தர் பொறாமைப்பட்டு
அந்த ஊர்ல
தியேட்டர், காலேஜ், சாப்பிங்மால்ன்னு
எக்கச்சக்கம் வந்துடுச்சி....!!

முந்தி சின்னதா இருந்த ஊர்...
இப்ப
இரண்டும் இரண்டு மடங்கு பெரியதா
வளர்ந்துடுச்சி...
அதனுடைய சுற்றளவும் பெரிசாகிடுச்சி...

ஊர் வளர்ந்ததுனால
எல்லோருக்கும் நல்ல தொழில் கிடைச்சது...!
அந்த ஊர் மக்களும் நிம்மதியா
மூணு வேலையும் நல்லா சாப்பிடுறாங்க...!!

இப்ப ஊருக்குள்ள ஒரே பேச்சி...

"ச்சே நம்ம தலைவர் மாதிரி...
ஊருக்கு ஒருத்தர் இருந்தா போதும்...
அந்த ஊர் சீக்கிரம் வளர்ந்திடும்..
என்னதான் போட்டி பொறமைன்னு இருந்தாலும்
கடைசில சாதிச்சிட்டாங்கன்னு..."

"முந்திலாம் ஒரு நல்ல நாளுக்கு
நல்ல துணிமணி எடுக்கனும்னா கூட
வேற ஊருக்குத் தான் போகனும்...
ஆனா இப்ப
எல்லாம் நம்ம ஊர்லைய்யே கிடைக்குன்னு..."

இப்படி ஊர் பெருமைய பத்தி
சந்தோஷமா பேசும் மக்கள் ஒரு விசயத்தை
மட்டும் மறந்து போய்ட்டாங்க...!

என்னதான்...
மூணு வேலையும் நிம்மதியா சோறு தின்னாலும்...!
அதுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும்
நம்ம ஊர்லைய்யே கிடைச்சாலும்...!!

அத வெளியூர்லருந்துதான் வாங்கிட்டு வந்து,
இங்க விக்கிறோம் என்பதை...!!!

நமக்கு தேவையான பொருளை
என்று நாமே விளைவிக்கிறோமோ
அன்றுதான் அது வளர்ச்சி...!

ஆனா நாம்
வளர்ச்சிக்காக போராடி போராடி
வளங்களை அழித்துக்கொண்டிருக்கிறோம்...!!


written by க.முரளி ( spark MRL K)