Thursday, 1 June 2017

நானும் புத்திசாலி



ஒரு முட்டாளும் புத்திசாலியும் 
தொலைதூர பயணத்துக்கு தயாராகுராங்க... 

திரும்பி வர எத்தன நாள் ஆகும்னு
அவங்களுக்கே தெரியாது

வழிச்செலவுக்கு தேவையான
பணத்தையும் பொருளையும்
ஒரு மூட்டையில கட்டி
தயார் பண்ணிக்கிட்டாங்க...

புத்திசாலிய பொருத்தவரைக்கும்
இந்த முட்டாள் எப்பவும் தன்கூடவே
இருக்கணும்னு நினைப்பான்...!

காரணம் அவன் பண்ணுற முட்டாள்தனத்தால
மத்தவங்ககிட்ட எளிதில் புத்திசாளிங்கிற பெற எடுத்திடலாம்னு...!!

அந்த முட்டாள் எது செஞ்சாலும்
செய்யுறதுக்கு முன்னாடி
அந்த புத்திசாளிட்ட கேட்டுட்டுதான் பண்ணுவான்...!
காரணம்
நாமளும் ஒரு புத்திசாலியா மாறணும்னு...!!

பயணம் ஆரம்பம் ஆகுது..
புத்திசாலி புத்திசாலித்தனமா செய்யுறதா நினைச்சி...
அந்த முட்டாள்கிட்ட சொல்றான்...

இந்த பணமும் பொருளுள் இருக்குற மூட்டைய
என்ன விட உன்னாலதான் பத்திரமா பாத்துக்க முடியும்
அதுனால நீயே வச்சிக்கொன்னு...

அந்த முட்டாளும் சரின்னு தலையாட்டிட்டு
மூட்டைய தூக்கிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டான்...

போகுற வழியில
ஒரு சின்ன ஆற்றை கடக்க வேண்டிய
சூழ்நிலை வருது...

எப்படியும் இந்த ஆத்த கடக்குறதுக்குள்ள
இந்த மூட்டைய ஆத்துல விட்டாலும் விட்டுடுவானு

அந்த புத்திசாலி முட்டாள் கிட்ட சொல்றான்...
“இவ்வளவு நேரம் நீ தூக்கிட்ட...
உனக்கு உடம்பு வலிக்கும்ல
கொஞ்ச நேரம் நா சுமக்குறேன்...”

இவனும் சரின்னு கொடுத்துடுறான்...
அவனும் வாங்கிக்கிறான்...
ஆற்றை கடக்குற வரைக்கும்...

இன்னும் கொஞ்ச தூரம்
நடந்து போறாங்க...
அங்க ஒரு பெரிய ஆறு வருது...
தண்ணி அதுல வேகமா போகுது...

அத பார்த்த உடனே புத்திசாலிக்கு
கொஞ்சம் பயம் வந்துடுச்சி...
இதுல மூட்டைய தூக்கிட்டுப் போனா
ஆத்துல நாமளும் அடிச்சிட்டு போனாலும் போய்டுவோம்னு
முட்டாள் கிட்ட சொல்றான்..

இதுக்கு முன்னாடி நா எப்படி
ஆத்த கடந்து போனேனோ...
அதே மாதிரி இப்ப நீ போ...
இது உனக்கு ஒரு பயிற்சின்னு...

இதுல அந்த முட்டாள் ஆத்துல
இறங்குனானா இல்ல இறங்கலையான்னு தெரியல...!

ஆனா பலநேரம் நாம
அந்த ஆத்துல இறங்கிக்கிட்டுத் தான் இருக்கோம்...!!

ஒருத்தன் சொல்றான்றதுக்காக அத நாம செய்யக்கூடது...
நமக்கு என்ன தோணுதோ... அத செய்யணும்..
அப்பத்தான் வெற்றியும், தோல்வியும்
நம்மளையே சேரும்....!!


written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment