Sunday, 16 July 2017

தியான மலை




என்ன சார்...
ஒரு வாரமா ஆளையே காணும்..? 

இல்லப்பா...
நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன்...
குடும்பத்துக்குள்ள ஒரே பிரச்சினை...!
மனசு சுத்தமா சரியில்ல...!!

சரி...
வீட்டுக்குள்ளேயே இருக்க முடியலேன்னு
அப்படியே...
கொஞ்சம் வெளிய நடந்து போகலாம்னு பார்த்தா...

சுத்தி எங்க பார்த்தாலும்...
ஒரே வெயில்.... தூசி... குப்பை...
இதெல்லாம் பார்க்கும் போது
கோபம் கோபமா வருது...

அப்பத்தான் என் பிரண்ட் சொன்னான்
வாழ்க்கையில ஒரு தடவையாவது...
ஒரு பவுர்ணமி அன்னைக்கு
தியானமலைக்கு போய்ட்டு வா
எல்லாம் சரியாகிடும்னு...!!

ஆள் நடமாட்டமே இல்லாத
அந்த இடத்துல என்ன அமைதி தெரியுமா..?
காற்று, மலை, மரம் அருவி...
எங்க பார்த்தாலும் ஒரே பசுமை...

உச்சியில ஒரே ஒரு சிவன்லிங்கம்...
அங்க ஒரு பத்து நிமிஷம்..
எதையும்மே நினைக்காம கண்ணா மூடி
தியானம் பண்ண...
என்ன நிம்மதி...

பேசாம...
அங்கையே இருந்திடலாம்னு தோணுது..!!

அடுத்த தடவ போகும் போது
குடும்பத்தோட போகலாம்னு இருக்கேன்..!

அப்படியாவது எங்க குடும்பத்துக்கு
நிம்மதி வரட்டும்...!

நீங்களும் வேணும்னா வாங்களேன்
எல்லோரும் ஒருதடவ,
அந்த சிவன...
தரிசனம் பண்ணிட்டு வருவோம்
என்று சொல்லி முடிக்க...

ஏன் சார்....
இப்படி எல்லோரு நிம்மதியா தேடி...
காடு மலைன்னு போனா...
அந்த மலையோட நிம்மதி யோய்டாதா..?

அங்கயும்
தூசி, குப்பை, பிளாஸ்டிக்ன்னு...!!



written by க.முரளி (spark MRL K)

எதுக்கு பழகனும்..?




கல்யாணம் முடிச்ச கைய்யோட
ஒரு புதுமணத்தம்பதி
குளிர்ச்சியான மழைப்பகுதிக்கு
ஹனிமூன் போறாங்க....

அந்த பொண்ணு அதிகம் படிச்சதும் இல்ல..
கட்டிக்கொடுக்குற வரைக்கும் இவ்வளவு தூரம்
வெளியூர் பயணம் போனதும் இல்ல..
கிராமத்துலேயே வளர்ந்தது

பையன் கொஞ்சம் படிச்சிருக்கான்...
அந்த பொண்ண...
வீட்டுல சொன்ன ஒரே காரணத்துக்காக
வேண்டா விருப்பாக கல்யாணம் பண்ணிக்கிட்டான்...

முதல்நாள் ரெண்டுபேரும் சுத்திப்பார்க்க போறாங்க...

அந்த பொண்ணு சொல்லுது...
மாமா இந்த இடம் எவ்வளவு அழகா இருக்குல...

என்றதும்
முதல்ல என்ன மாமான்னு கூப்புடாத..!.
ஏதோ... வயசான மாதிரி...!!
இரிட்டேட்டிங்கா இருக்கு...!!!

ம்ம்ம் இனிமே கூப்பட மாட்டேங்க...
என்று
அந்த பொண்ணு கொஞ்ச நேரம் அமைதியா இருக்க

இப்ப எதுக்கு உம்முன்னு இருக்க...
ஏதாவது சாப்புடுரியா...?
என்று கேட்க...

காபி...

இங்க டீ தான் ஃபேமஸ்
என்றவரே அண்ணே ரெண்டு டீ
என்று கடைக்காரனிடம் சொல்ல...

எனக்கு டீ பிடிக்காது...!

எனக்கு உன்னையும் தான் பிடிக்காது...
நா கட்டிக்கலா...
என்று முனங்கியவாறு...

குடி நல்லா இருக்கும்...
என்று டீயை குடித்தபடி
ஆமா...எதோ சொல்ல வந்தியே என்னது...?
என்றதும்...

இல்ல... இந்த இடம் இவ்வளவு அழகா இருக்கே...
இங்கையே கொஞ்ச இடம் வாங்கி...
சின்னதா ஒரு தோட்டம் போட்டு...
நீங்க... நான்னு... அப்புறம் நம்ம குழந்தைன்னு
மூணு பேரு மட்டும் இருந்தா எப்படி இருக்கும்...
என்று சொல்ல

ம்ம்ம்... கேவலமா இருக்கும்...
என்ன என்ன நினைப்பாங்க...
இதுக்காடி எங்கப்பா என்ன படிக்க வச்சாரு..
இங்க ஒரு வீடு, ஆடு, மாடு தோட்டமா...
சரியானா நாட்டுப்புறத்தான இருக்கியே...!

என்று அவன் சொல்ல...
அவளால் பதிலுக்கு வாய் திறந்து
சொல்ல முடியல.. ஆனா அவ மனசு சொல்லும்...

இந்த பேச்சல்லாம் கேட்கவாடா
எங்க அப்பா
வீடு, ஆடு, மாடு, தோட்டம் எல்லாத்தையும்
வித்து உனக்கு என்ன கட்டி வச்சாரு...

எனக்காக எங்கப்பா வித்தத
நமக்காக உன்னால வாங்க துப்பில்லைன்னு சொல்லுடான்னு...!!

டீ எப்படி இருக்கு...?

ம்ம்.. நல்லா இருக்குங்க...!!

இனிமே குடிச்சி பழகு...!!!


written by க.முரளி (spark MRL K)

உங்களுக்கு என்ன தோணும்.?



ஒருத்தன் நைட்சோ படம் பார்த்துட்டு...
வீட்டுக்கு தனியா நடந்து வந்துக்கிட்டு இருக்கான்...

வீடு பக்கத்துல தான்...
நடந்து போன அரை மணிநேரத்துல போயிடலாம்... 

அவன் நினைச்சிருந்தா
பஸ்சுல போகலாம்...
கையில பஸ்சுக்கு காசும் இருக்கு...!

ஒவ்வொரு கால்மணி நேரத்துக்கும்
அவனுக்கு ஒரு பஸ் இருக்கு...
டிக்கெட் என்னோமோ பத்துரூபாய் தான்...

நடந்து போய்கிட்டே இருக்கான்...
இரவு நேரம் என்பதால்...
தனியா போன இவன
திடீர்னு ஒரு பத்து நாய்
சுத்தி வளைத்து குலைக்க ஆரம்பிச்சிடுச்சி...!

இவனுக்கு என்ன பண்ணனும்னு தெரியல...!!

அவனால அந்த இடத்த விட்டு
நகர முடியல...
நகர்ந்தா நாயோட சத்தம் அதிகமாகுது...!!!

இந்த நேரம் பார்த்து
ரோட்டுல யாரையுமே காணும்...
ஒரு இரண்டு நிமிஷம் கழிச்சி
அவன் போகவேண்டிய பேருந்து
அவன கடந்து மெல்ல போகுது...!

இப்ப
அந்த இடத்துல... நீங்க இருந்தா...!
உங்களுக்கு என்ன தோணும்...?

written by க.முரளி (spark MRL K)