Saturday, 19 September 2020

பிச்சைக்காரர்கள் தேவை...!!!



சில நுறு வருஷத்துக்கு முன்னாடி.... 


ஏழை என்ற சொல்லுக்கு 

சிறிதளவு கூட இடம் கொடுக்காத...! 

ஒரு பணக்கார தேசத்தை...!! 

வைரவேந்தன் என்ற அரசன் 

ஆட்சி செய்து வந்தான்...


ஒருநாள் இரவு... 

கண் அயர்ந்து தூக்கும்பொழுது, 

அந்த அரசனுக்கு ஒரு கனவு வருகிறது...


திடீர்னு... 

எதிரி நாட்டு அரசன் 

தன்னுடைய நாட்டை கைப்பற்றி

அரசனை சிறையில் தள்ளியது மட்டுமல்லாமல்... 


வாரம் ஒரு முறை.... 

அந்நாட்டு மக்களிடமே பிச்சை எடுத்து 

அரசன் உணவு உண்ண வேண்டும் என்று 

தண்டனையும் அளிக்கிறான்...! 


இப்படி ஒரு படு பயங்கரமான 

கனவு வந்ததிலிருந்து... 

அரசனுக்கு தன்னுடைய எதிர்காலம் குறித்து 

அதிக பயம் வந்துவிடுகிறது...! 


போர் செய்து... எதிரி நாட்டு அரசன் 

தன்னை பிச்சை எடுக்கவைத்து விடுவானோ..? 


ஒருவேளை இது உண்மையாக நடந்தால்...!!

தனக்கு இதைவிடப் மிகப்பெரிய அவமானம் 

வேறெதுவுமில்லை என்று 


உடனடியாக தனது படைகளை பலப்படுத்துகிறான்....! 

போர் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறான்...!! 

எப்பொழுது வேண்டுமானாலும் போர் வரலாம்...  

தயாராக இருக்கும்படி உத்தரவிடுகிறான்...!!!


இருந்தும் பயம் போகவில்லை...!


இதற்கு பரிகாரம் ஏதாவது இருக்குமா..? 

என்று தெரிந்துகொள்ள... 

அரசவை ஜோதிடரை அழைத்து  

இரசியமாகக் கேட்க


அதற்கு அந்த ஜோதிடரும் 

இராப்பகலா ஓலைச்சுவடிகளை ஆராய்சி பண்ணி 

ஒரு பரிகாரத்தையும் சொல்றார்...! 


ஒரு பிச்சைக்காரன கண்டுபிடிச்சி

சரியா ஒரு வருஷத்துக்கு 

வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமாவது.

அவனுக்கு உங்க கையாள சமைச்சி 

ஒருவேளை வயிறு நிரம்பசோறு போட்டா 

இந்தக்கனவு பழிக்காதுன்னு சொல்லிவிட்டு... 


இறுதியாக.... 


அரசே... பகல் கனவு கூட 

பழிக்காமல் போகலாம்..!

தாங்கள் கண்டதோ நடுச்சாமத்தில்... 


மேலும் இந்த விஷயம் 

எதிரி நாட்டு அரசனுக்கு 

தெரியாமல் பார்த்துக்கொள்ளவும்... 


தெரிந்தால்...!?!? 


அனைத்து பிச்சைக்காரர்களையும் கண்டுபிடித்து, 

சோற்றில் விஷம் வைத்துக் கொன்றுவிடுவான்..!.  

ஜாக்கிரதை..!!    


பிறகு... பரிகாரம் செய்ய பிச்சைக்காரர்கள் 

கிடைக்காமல்....!

தாங்கள் பிச்சை எடுக்கும் நிலை வந்துவிடும்...!! 

என்று கூற....


அதைக்கேட்ட அரசனுக்கு ஒருநிமிடம் 

தூக்கிவாரி போட்டுவிடுகிறது..!! 


காரணம்... தன்னுடைய நாட்டில்  

ஏழை என்ற சொல்லுக்கே இடம் கிடையாது... !

அனைவரும் பணக்காரர்கள்...!!

அப்படி இருக்கும்போது... 

பிச்சைக்காரனுக்கு முதல்ல எங்க போவது...?!?!?!  


யோசிக்கிறான்... 

தூங்காமல் விடிய விடிய யோசிக்கிறான்... 


எந்த யோசனையும் வராமல் போக... 

இறுதியாக பக்கத்தில் இருக்கும் 

நட்பு நாட்டிற்கு புறாவின் மூலம் 

ஒரு தூது அனுப்புகிறான்... 


அதில்... 

நண்பா... எனக்கு உடனடியாக 

உன் நாட்டில் இருக்கும் 

ஒரு பிச்சைக்காரன் தேவை...

நீ அனுப்பி வைப்பாய் என்ற 

நம்பிக்கையில் நான் காத்திருக்கிறேன்..

ஏன்...? எதற்கு...? என்று காரணம் கேட்காதே 

என்று எழுதியிருக்க 


அதைப்படித்த நட்பு நாட்டு அரசனுக்கு 

ஒரே குழப்பம்...


என்ன இது...?

ஒரு பணக்கார நாட்டின் அரசன்... 

பிச்சைகாரர்களை கேட்கிறாரே...?

என்று நினைத்தபடி 

அந்நாட்டில் பிச்சை எடுக்கும் ஒருவரை 

வேறுவழியின்றி அனுப்பியும் வைக்ககிறார்... 


முதல் நாள்... 

அரசன் தன்னுடைய கையால் சமைத்து... 

அந்த பிச்சைக்காரனுக்கு, 

தடபுடலாக விருந்து வைக்கிறார்...!! 


பிச்சைக்காரும் சந்தோஷமாக சாப்பிட...


நாட்கள் மெல்ல நகர்கிறது...  

ஒரு மாதம் முடியும் பொழுது... 

அந்த பிச்சைக்காரன் இறந்துவிடுகிறார்... 


பின்பு மீண்டும் ஒரு கடிதம்... 


நட்பு நாட்டு அரசன்... 

மீண்டும் ஒரு பிச்சைக்காரனை அனுப்புகிறான்..


அவனும் ஒரு மாதத்தில் இறந்து போக... 


இப்படி மறுபடியும் மறுபடியும் கடிதம் அனுப்ப.... 


நட்பு நாட்டு அரசன் 

அனுப்பி வைக்கும் பிச்சைக்காரர்கள்

அனைவரும்... வந்த ஒரு மாதத்திற்குள் இறந்துபோக....


ஒரு கட்டத்தில் வெறுப்பான நட்பு நாட்டு அரசன்...  


இப்படியே போனால்... 

மாதம் ஒருவர் என்று... 

கொஞ்சம் கொஞ்சமாக என் நாட்டு மக்களை 

கொன்றுவிடுவான்...! என்று 

பிச்சைக்காரர்களை அனுப்புவதை நிறுத்துகிறான்.!!


அதில் கடுப்பான வைரவேந்தன்... 

நட்பு நாட்டு அரசனிடம் கோபமாக... 


சாதாரண பிச்சைக்காரர்கள்....! 

அவர்களை அனுப்பிவைக்க 

உனக்கு துப்பில்ல...!!

உனக்கு எதுக்கு இந்த அரசன் என்ற பதிவி..!!! 

என்று கூற...


அதற்கு நட்பு நாட்டு அரசன்...


ஏதோ பழகிய தோஷத்திற்கு... 

பிச்சைக்காரர்களை உனக்கு பிச்சையாக 

அனுப்பி வைத்தால்... 

என்னிடமே கோபத்தில் கத்துகிறாயா..?

என்று பதிலுக்கு கேட்க... 


இருவக்கும் இடையே சண்டை முத்திப்போய்... 

நட்பு அரசன்.. எதிரியாக மாறி 

இரு நாட்டுக்கும் இடையே போராக வெடிக்கிறது.!!


இறுதியில் நட்புநாட்டு அரசன் வெற்றி பெற்று 

நாட்டை கைப்பற்றி... அரசனை சிறையும் வைத்து... 


பிச்சைக்காரர்கள் என்றால் உனக்கு 

சாதாரணமாப் போய்விட்டது..! 

பிச்சை எடுத்தால் தான்...

அவர்களுடை வலி தெரியும்...!! என்று 

வாரம் ஒருமுறை பிச்சை எடுத்து சாப்பிடு... 

அதுதான் உனக்குத் தண்டனை என்று கூற


வேறு வழியின்றி... வைரவேந்தன் 

வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கும் பொழுது...

ஒரு நாள் அந்த ஜோதிடர் வீடு வருகிறது... 


ஜோதிடர் அரசரை பார்த்து... 


பரிகாரத்தை சரியாக செய்திருந்தால்

இந்த நிலைமை வந்திருக்காது அரசே என்று கூற... 


அதற்கு வைரவேந்தன்... 

நீர் கூறியதைத்தான் அப்படியே செய்தேன் 

என்று சொல்ல...  


அப்படி என்ன செய்தீர்கள்...? 


வாரம் ஒருமுறை 

என் கையால் சமைத்து உணவளித்தேன்....!

என்று கூற 


பிறகு ஏன் அவர்கள் இறக்கிறார்கள்..? 

என்று ஜோதிடர் கேட்க...


அதுதான் கூறினேனே....

வாரம் ஒருமுறை என் கையால் உணவு அளித்தேன் 

என்று அழுத்தமாக கூற 


சற்று யோசித்த ஜோதிடர் 

வைரவேந்தனைப் பார்த்து 

 

அப்படியென்றால் மற்ற ஆறு நாட்கள்...?

என்று கேட்க


அதைப்பற்றி...  

நீ பரிகாரத்தில் சொல்லவே இல்லையே...?

என்றதும்.... 


ஜோதிடர்........


நீ பிச்சை எடுக்குறதுல தப்பே இல்லை...!!!!


Written by Murali K

வாசித்தமைக்கு நன்றி 🙏 

2 comments: