Thursday, 20 April 2017

ஐம்பது ரூபாய் டிக்கெட்





    சென்னை, மதுரை போன்ற
    நகரங்களில் ஒரு வழக்கம் உள்ளது......

    அதாவது... ஐம்பது ரூபாய் கொடுதது
    ஒரு டிக்கெட் வாங்குனா (ஒன் டே பாஸ்)
    அன்னைக்கு முழுவதும் பஸ்சுல
    டிக்கெட்டே வாங்காம நல்லா சுத்திக்கலாம்...

    அப்படி ஒரு நகரத்துல ஒருத்தன்...
    ஒருநாள் பொழுதை கழிக்க
    அந்த டிக்கெட்ட எடுத்துக்கிட்டு
    ஒரு பஸ்சுல ஏறிட்டான்...

    அவனுக்கு
    இந்தயிடத்துக்குத்தான் போகனும்னு
    அவசியம் இல்ல... அன்னைக்கு முழுவதும்
    உக்கார சீட் கிடைக்கிற பஸ்ல ஏறி
    நினைக்கிற இடத்துல இறங்கி...
    திரும்பவும் ஒரு பஸ்ல ஏறி...
    சாயங்காலம் வரை பொழுத கழிக்கனும்
    அவ்வளவு தான்....!!

    அப்படி அவன் ஏறும் போது
    காலியா இருந்த பேருந்து...
    அடுத்த இரண்டு ஸ்டாப்புல
    புல்லாகிடுச்சி....!!!

    பஸ்ல பாதிபேர் உக்கார இடமில்லாம
    நின்னுட்டு இருக்காங்க....
    சிலபேர் படிக்கட்டுல தொங்கிக்கிட்டு வாராங்க...

    அவங்க எல்லாம்....
    இவனமாதிரி பயணம் பண்ணல...!!

    தினமும்
    இந்த இடத்துக்கு இத்தனை மணிக்கு போயே ஆகனும்...!
    அதுக்கு இந்த பஸ்சுல ஏறுனாத்தான் போக முடியும்னு
    பயணம் பண்றவங்க...!!
    அது வேலைக்கோ அல்லது பள்ளிக்கோ...!!!

    அந்த பஸ்ல ஒருத்தருடைய
    சத்தம் மட்டும் சத்தமா கேட்டுக்கிட்டே இருக்கு...

    "டிக்கெட் வாங்குறவங்க மறக்காம வாங்கிக்கோங்க...
    எங்கமா போகனும்...
    சில்லறை இருந்தா கொடுமான்னு..."

    ஆனா இந்த சத்ததை பத்தி இவனுக்கு
    கவலை இல்லை...
    இவன் கிட்டதான் பாஸ் இருக்கே...

    இவன் உக்காந்திருக்கிற சீட்டுக்கு
    பக்கத்துல ஒருத்தன் கூட்டத்துல
    கஷ்ட்டப்பட்டு நிக்கிறான்...

    யாராவது அடுத்த ஸ்டாப்புல எந்திரிச்சா...
    உடனே உக்காந்திடலாம்னு...!!!

    இவனுக்கு அடுத்த ஸ்டாப்புல இறங்கனும்னு தோனுது...
    ஆனா இவ்வளவு கூட்டத்துல கஷ்ட்டப்பட்டு
    நெரிசல்ல போய் இறங்கவா...
    பஸ் கொஞ்சம் காலியானவுடனே இறங்கிக்கலாம்னு
    நினைக்கிறான்...

    இதில் ஒரு விசயம் என்னன்னா...?

    இலக்கு இல்லாம பயணம் பண்றவன்
    ஒருநிமிஷம் கஷ்ட்டப்பட்டு இறங்கிட்டா...!

    இலக்கோடு பயணம் பண்ணுறவன்
    ஒரு பத்து பதினைஞ்சி நிமிசம்
    நிம்மதியா உக்காந்திட்டு போவான்...!!

    உண்மையில் இங்கு பாதிக்கு மேற்பட்டோர்
    இலக்கு இல்லாமல் பயணம் செய்வதால் தான்...
    இலக்கோடு பயணம் செய்பவர்களுக்கு,
    அதில் இடம் கிடைப்பதில்லை....


    written by க.முரளி (spark MRL K)

Tuesday, 11 April 2017

ஆஃப்ட்ரால் ஒரு ரூபாய்




ஞாயிற்றுக்கிழமை ஒருத்தன்
தனியா ஊர் சுத்த முடிவு பண்றான்...

அவன் கிட்ட ஒரு பழக்கம் இருக்கு..
அவனோட பர்ஸ்ல
எவ்வளவு பணம் இருந்தாலும்
அதுல தனியா ஒரு நூறு ரூபாய
ஒளிச்சி வச்சிருப்பான்...

ஒரு ஸ்சேப்டிக்கு...!
என்றாது ஒருநாள் அது பயன்படும்னு..

அவன பொருத்தவரை,
நல்லா சம்பாதிக்கனும...
நல்லா செலவு பண்ணும்...
அவ்வளவுதான்

முதல்ல ஒரு கடைக்குப் போறான்...
தேவையானத வாங்குறான்...
அதுக்கு காசும் கொடுக்குறான்...

கடைக்காரர் சொல்றார்...
"தம்பி மீதி ஒரு ரூபாய் சில்லறை இல்ல
அதுக்கு சாக்லேட் தரட்டுமா...?"

அதுக்கு அவன்...
"அந்த ஒரு ரூபாய வச்சி
நான் என்ன மச்சி விட கட்டப்போறேன்...!
நீங்களே அத வச்சிக்கோங்கன்னு சொல்லி
பந்தாவா கிளம்பி போறான்...

அடுத்து ஒரு ஓட்டலுக்கு போறான்
அங்கு சப்பிட்டு முடித்தப்பின்
அதுக்கு காசு கொடுத்து
மீதி சில்லறைய வெயிட்டருக்கு
டிப்ஸ்சா கொடுத்துட்டான்...

உடனே வெயிட்டர் இவனுக்கு
வணக்கம் வைக்க...
இவன் கெத்தா கிளம்பி போறான்...

காரணம் சில்லாரையெல்லாம்
அவனோட பர்ஸ்ல வச்சா
அவன் பர்ஸ் வெயிட்டாயிடுமாம்...

இப்படியே செலவு பண்ணுனதுல
நேரம் போனது தெரியாம இரவு ஆகிடுச்சி...
கையுலையும் எல்லா பணமும் செலவாகிடுச்சி...

கடைசியா ஒளிச்சி வச்ச நூறு மட்டும் தான் இருக்கு...

இப்ப அவன் வீட்டுல இருந்து வெறும்
ஒரு பத்து கிலோமீட்டர் தூரத்துல தான் இருக்கான்...

சரி ஆட்டோவுல போயிடலாம்னு
அட்டோ காரன்கிட்ட கேட்கான்...
அவன் நூத்தியம்பது ஆகும்னு சொல்றான்...

நடந்தும் போக முடியாது...
வேற வழியில்லாம
பக்கத்துல இருக்குற பஸ்டாப்புல நிக்கிறான்...

இரவு என்பதால்
அரை மணி நேரம் கழிச்சி
ஒரு பஸ் வருது...

கையில் நூறு ரூபாய் இருக்குற
தைரியத்துல பஸ்சுல ஏறி
கண்டக்டர் கிட்ட கொடுத்து
டிக்கெட் கேட்டா...

பதினோரு ரூபாய் டிக்கெட்டுக்கு
நூறு ரூபாய நீட்டுற...
ஒரு ரூபாய் கொடுத்துட்டு
மீதி தொண்ணூறு ரூபாய வாங்கிக்கோன்னு
சொல்லிட்டார்...

மத்தவங்க முன்னாடி சொன்னதுனால இவனுக்கு
கொஞ்சம் அவமானமா போச்சி...!!

வெறும் ஒரு ரூபாய் தான...
பரவாயில்ல நீயே வச்சிக்கோன்னு
நாம சொல்லும்போது
நமக்கு பெருமிதமாத்தான் இருக்கும்...!

அதே ஒரு ரூபாய
நாம கொடுக்க முடியாம போகும்போதுதான்
நமக்கு அசிங்கமா இருக்கும்...!!

ஆனா அது எப்பவும்
ஆஃப்ட்ரால் ஒரு ரூபாய்...!!!



written by க.முரளி (spark MRL K)

Thursday, 6 April 2017

பழைய புத்தக்கடை


படிக்க விருப்பம் இல்லாத
ஒரு பணக்கார வீட்டுப்பையன்
ஒரு கல்லூரில படிக்கிறான்...

அவன் படிக்கானோ இல்லையோ...
அந்தந்த பாடத்துக்கு தேவையான
எல்லா புத்தகத்தையும் வாங்கிடுவான்.

காரணம்...
புத்தகம் வாங்குவதாக சொல்லி வீட்டுல
கொஞ்சம் காச ஆட்டைய போட்டுடுவான்...’

அந்த செமஸ்டர் முடிஞ்சா உடனே...
அதே புத்தகத்தை வித்து காசாக்கிடுவான்...
ஆனா கடைசிவரைக்கும் அந்த புத்தகத்தின்
முதல் பக்கத்தை கூட படிக்கமாட்டன்...

இப்படித்தான் ஒருதடவ ஐநூறு ரூபாய
வீட்டுல வாங்கிட்டு போய்...
நானுறு ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கி
மீதி நூற அப்புறமா செலவு பண்ணலாம்னு
அதே புத்தகத்துக்குள்ள வச்சிட்டான்...

வீட்டுலயும் யாரும் படிக்காத்துனால
அந்த புத்தகத்த தொட்டுக்கூட பார்க்கல...!!

என்னமோ தெரியல
அவநேரம்... அந்த நூறு ரூபாய
உள்ள வச்சதைய்யே அவன் மறந்துட்டான்...

செமஸ்டர் முடிஞ்சாது...
முடிஞ்சா கைய்யோட அந்த புத்தகத்தை
பழைய புத்தக கடையில நூத்தியம்பதுக்கு விக்கிறான்..

அத அந்த கடைக்காரர்...
இரநூறு ரூபாய்க்கு ஒரு பையன்ட வித்துடுறார்.

அந்த பையன் படிக்கிற பையன்
ஆனா கல்லூரில என்ன நடத்துறாங்களோ
அத மட்டும் தான் படிப்பான்...
அப்பத்தான் நல்ல மார்க் வாங்க முடியுமாம்...!!

இந்த புத்தகத்துல பாதிக்கு மேல்
அவுட்டாஃப் செலபசாம்
அதனால பாதிக்கு மேல் அவன் புரட்டிக்கூட பார்க்கல...!
புத்தகம் பெரிய புத்தகம் என்பதால்...
உள்ள இருந்த நூறு இவன் கண்ணுக்குத் தெரியல...!!

நல்ல படிச்சான்... பாசாகி நல்ல மார்க்கும் வாங்குனான்...
வாங்குன கைய்யோட அந்த புத்தகத்தை
அதே பழைய கடையில வித்துட்டு...
வேற ஒரு புத்தகத்த வாங்கி
மறுபடியும் கல்லூரில நடத்துறதா மட்டும்
படிக்க ஆரம்பிச்சிட்டன்

ஆனா கண்டிப்பா
அந்த புத்தகத்தை எழுதியவர்...
முதல் பக்கத்துல இருந்து கடைசி பக்கம் வரை...
எல்லோரும் படிச்சி தெரிஞ்ச்சிக்கிடனும்னு தான்
எழுதியிருப்பார்...!!

இங்க எல்லா கல்லூரி புத்தகத்துலயும்
பாதி புக்குதான் செலபஸ்ல இருக்குன்னு சொல்லி
மீதி புக்க அந்த நூறு ரூபாய் மாதிரி,
யாருக்கும் பயன்படாம ஆக்கிட்டாங்க...!!

ஒருவேளை அவன் அத புரட்டிப் படிச்சிருந்தா...
கல்வியோட சேர்த்து செல்வமும் அவனுக்கு கிடைச்சிருக்கும்...

அவன் வாழ்க்கையில...!
கல்விச்செல்வமாய்...!!

written by க.முரளி (spark MRL K)