ஞாயிற்றுக்கிழமை ஒருத்தன்
தனியா ஊர் சுத்த முடிவு பண்றான்...
அவன் கிட்ட ஒரு பழக்கம் இருக்கு..
அவனோட பர்ஸ்ல
எவ்வளவு பணம் இருந்தாலும்
அதுல தனியா ஒரு நூறு ரூபாய
ஒளிச்சி வச்சிருப்பான்...
ஒரு ஸ்சேப்டிக்கு...!
என்றாது ஒருநாள் அது பயன்படும்னு..
அவன பொருத்தவரை,
நல்லா சம்பாதிக்கனும...
நல்லா செலவு பண்ணும்...
அவ்வளவுதான்
முதல்ல ஒரு கடைக்குப் போறான்...
தேவையானத வாங்குறான்...
அதுக்கு காசும் கொடுக்குறான்...
கடைக்காரர் சொல்றார்...
"தம்பி மீதி ஒரு ரூபாய் சில்லறை இல்ல
அதுக்கு சாக்லேட் தரட்டுமா...?"
அதுக்கு அவன்...
"அந்த ஒரு ரூபாய வச்சி
நான் என்ன மச்சி விட கட்டப்போறேன்...!
நீங்களே அத வச்சிக்கோங்கன்னு சொல்லி
பந்தாவா கிளம்பி போறான்...
அடுத்து ஒரு ஓட்டலுக்கு போறான்
அங்கு சப்பிட்டு முடித்தப்பின்
அதுக்கு காசு கொடுத்து
மீதி சில்லறைய வெயிட்டருக்கு
டிப்ஸ்சா கொடுத்துட்டான்...
உடனே வெயிட்டர் இவனுக்கு
வணக்கம் வைக்க...
இவன் கெத்தா கிளம்பி போறான்...
காரணம் சில்லாரையெல்லாம்
அவனோட பர்ஸ்ல வச்சா
அவன் பர்ஸ் வெயிட்டாயிடுமாம்...
இப்படியே செலவு பண்ணுனதுல
நேரம் போனது தெரியாம இரவு ஆகிடுச்சி...
கையுலையும் எல்லா பணமும் செலவாகிடுச்சி...
கடைசியா ஒளிச்சி வச்ச நூறு மட்டும் தான் இருக்கு...
இப்ப அவன் வீட்டுல இருந்து வெறும்
ஒரு பத்து கிலோமீட்டர் தூரத்துல தான் இருக்கான்...
சரி ஆட்டோவுல போயிடலாம்னு
அட்டோ காரன்கிட்ட கேட்கான்...
அவன் நூத்தியம்பது ஆகும்னு சொல்றான்...
நடந்தும் போக முடியாது...
வேற வழியில்லாம
பக்கத்துல இருக்குற பஸ்டாப்புல நிக்கிறான்...
இரவு என்பதால்
அரை மணி நேரம் கழிச்சி
ஒரு பஸ் வருது...
கையில் நூறு ரூபாய் இருக்குற
தைரியத்துல பஸ்சுல ஏறி
கண்டக்டர் கிட்ட கொடுத்து
டிக்கெட் கேட்டா...
பதினோரு ரூபாய் டிக்கெட்டுக்கு
நூறு ரூபாய நீட்டுற...
ஒரு ரூபாய் கொடுத்துட்டு
மீதி தொண்ணூறு ரூபாய வாங்கிக்கோன்னு
சொல்லிட்டார்...
மத்தவங்க முன்னாடி சொன்னதுனால இவனுக்கு
கொஞ்சம் அவமானமா போச்சி...!!
வெறும் ஒரு ரூபாய் தான...
பரவாயில்ல நீயே வச்சிக்கோன்னு
நாம சொல்லும்போது
நமக்கு பெருமிதமாத்தான் இருக்கும்...!
அதே ஒரு ரூபாய
நாம கொடுக்க முடியாம போகும்போதுதான்
நமக்கு அசிங்கமா இருக்கும்...!!
ஆனா அது எப்பவும்
ஆஃப்ட்ரால் ஒரு ரூபாய்...!!!
written by க.முரளி (spark MRL K)
No comments:
Post a Comment