Thursday, 6 April 2017

பழைய புத்தக்கடை


படிக்க விருப்பம் இல்லாத
ஒரு பணக்கார வீட்டுப்பையன்
ஒரு கல்லூரில படிக்கிறான்...

அவன் படிக்கானோ இல்லையோ...
அந்தந்த பாடத்துக்கு தேவையான
எல்லா புத்தகத்தையும் வாங்கிடுவான்.

காரணம்...
புத்தகம் வாங்குவதாக சொல்லி வீட்டுல
கொஞ்சம் காச ஆட்டைய போட்டுடுவான்...’

அந்த செமஸ்டர் முடிஞ்சா உடனே...
அதே புத்தகத்தை வித்து காசாக்கிடுவான்...
ஆனா கடைசிவரைக்கும் அந்த புத்தகத்தின்
முதல் பக்கத்தை கூட படிக்கமாட்டன்...

இப்படித்தான் ஒருதடவ ஐநூறு ரூபாய
வீட்டுல வாங்கிட்டு போய்...
நானுறு ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கி
மீதி நூற அப்புறமா செலவு பண்ணலாம்னு
அதே புத்தகத்துக்குள்ள வச்சிட்டான்...

வீட்டுலயும் யாரும் படிக்காத்துனால
அந்த புத்தகத்த தொட்டுக்கூட பார்க்கல...!!

என்னமோ தெரியல
அவநேரம்... அந்த நூறு ரூபாய
உள்ள வச்சதைய்யே அவன் மறந்துட்டான்...

செமஸ்டர் முடிஞ்சாது...
முடிஞ்சா கைய்யோட அந்த புத்தகத்தை
பழைய புத்தக கடையில நூத்தியம்பதுக்கு விக்கிறான்..

அத அந்த கடைக்காரர்...
இரநூறு ரூபாய்க்கு ஒரு பையன்ட வித்துடுறார்.

அந்த பையன் படிக்கிற பையன்
ஆனா கல்லூரில என்ன நடத்துறாங்களோ
அத மட்டும் தான் படிப்பான்...
அப்பத்தான் நல்ல மார்க் வாங்க முடியுமாம்...!!

இந்த புத்தகத்துல பாதிக்கு மேல்
அவுட்டாஃப் செலபசாம்
அதனால பாதிக்கு மேல் அவன் புரட்டிக்கூட பார்க்கல...!
புத்தகம் பெரிய புத்தகம் என்பதால்...
உள்ள இருந்த நூறு இவன் கண்ணுக்குத் தெரியல...!!

நல்ல படிச்சான்... பாசாகி நல்ல மார்க்கும் வாங்குனான்...
வாங்குன கைய்யோட அந்த புத்தகத்தை
அதே பழைய கடையில வித்துட்டு...
வேற ஒரு புத்தகத்த வாங்கி
மறுபடியும் கல்லூரில நடத்துறதா மட்டும்
படிக்க ஆரம்பிச்சிட்டன்

ஆனா கண்டிப்பா
அந்த புத்தகத்தை எழுதியவர்...
முதல் பக்கத்துல இருந்து கடைசி பக்கம் வரை...
எல்லோரும் படிச்சி தெரிஞ்ச்சிக்கிடனும்னு தான்
எழுதியிருப்பார்...!!

இங்க எல்லா கல்லூரி புத்தகத்துலயும்
பாதி புக்குதான் செலபஸ்ல இருக்குன்னு சொல்லி
மீதி புக்க அந்த நூறு ரூபாய் மாதிரி,
யாருக்கும் பயன்படாம ஆக்கிட்டாங்க...!!

ஒருவேளை அவன் அத புரட்டிப் படிச்சிருந்தா...
கல்வியோட சேர்த்து செல்வமும் அவனுக்கு கிடைச்சிருக்கும்...

அவன் வாழ்க்கையில...!
கல்விச்செல்வமாய்...!!

written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment