Friday, 26 October 2018

கண்ணாடி


கண்ணாடி
*************
ஒரு பெரிய செல்வந்தர்
ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற 
ஒரு விவசாய நிலத்தை அடைய நினைக்கிறான்..
அந்த நிலம் ஒன்றும் 
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அளவு இல்லை...
வெறும் ஒன்னே கால் ஏக்கர் தான்...
அதுவும் ஒரு ஏழை விவசாயியின்
கைவசம் உள்ளது...
அந்த செல்வந்தர பொறுத்தவரைக்கும்
அந்த நிலத்துக்கு அடியில இருக்குற
விலை மதிப்பற்ற புதையல் மேல
ஒரு ஆசை..!!
ஆனா நேரடியா போய் அவன்கிட்ட
அந்த நிலத்தை கேட்க
அவனுக்கு கவுரவ குறைச்சல்...
போயும்... போயும்...
ஒரு விவசாயிகிட்ட போய் பேசனுமான்னு...!!
ஆனா அந்த விசாயிக்கு, அந்த நிலத்த
விற்கவோ... கொடுக்கவோ மனம் இல்ல...!
காரணம் நிலத்து மேல விளையிற
பயிர் மேல ஒரு பாசம்...!!
எப்படியும் அந்த நிலத்த
அடைஞ்சே ஆகனும்னு அந்த செல்வந்தர்...
காசுக்காக என்ன வேணும்னாலும் செய்யக்கூடிய
ஒரு கூலிப்படை தலைவன் கிட்ட போறான்...
தான் கையில கொண்டு வந்த
ஆயிரம் பொற்காச தூக்கி வீசி....
"நீ என்ன பண்ணுவியோ...
ஏது பண்ணுவியோ...
எனக்கு தெரியாது...
எனக்கு அந்த நிலம் வேணும்"னு
சொல்லிட்டு போய்ட்டான்..!!
அது தெரியாத அந்த விவசாயி...
அதே கூலிப்படை,
தலைவன் கிட்டயே போய்...
என்கிட்ட... நா சேர்த்து வச்ச
ஒரு ஐம்பது பொற்காசு இருக்கு
அத வச்சிக்கிட்டு
என்னோட நிலத்த நீங்க தான்
பாதுகாக்கனும்னு சொல்றான்...!!
இந்த ரெண்டு பேரும்
சொல்ற நிலம்.. ஒரே நிலம்னு
அந்த தலைவனுக்கு தெரியாது..
கை நீட்டி காச வாங்கிட்டான்...
நாட்கள்
கொஞ்சம் கொஞ்சமா நகருது...
முதல்ல
செல்வந்தருக்காக நிலத்த அபகரிக்க
தன்னுடைய கூலிப்படை கும்பலோட
அந்த நிலம் இருக்கும் இடத்துக்கு
அந்த தலைவன் போறான்..
அந்த இடத்துக்கு போனா..
அந்த தலைவன பார்த்த விவசாயி..
வேக வேகமா...
"வாங்க வாங்க...
எப்படியும் எங்க நிலத்த பாதுகாக்க
நீங்க வருவீங்கன்னு தெரியும்" னு
வரவேற்க ஆரம்பிக்கிறான்...!!
உடனே கூட வந்த செல்வந்தர்...
இவன் தான்
இந்த இடத்துக்கு சொந்தக்காரன்...
இவன் கிட்ட இருந்து தான்
நிலத்த அபகரிக்கனும்னு சொல்றன்...!
அப்பத்தான் அந்த தலைவனுக்கு தெரியுது...
நாம காசு வாங்குன ரெண்டும்
ஒரே நிலத்துக்குன்னு...!!
இப்ப என்ன பண்ணனும்னு
அந்த தலைவனுக்கு புரியல...
யார் பக்கம் பேசுறதுன்னு தெரியல..
ஒருபக்கம் விவசாயி
நிலத்த பாதுகாக்க சொல்றான்...!
மறுபக்கம் செல்வந்தர்
நிலத்த புடிங்கி கொடுக்க சொல்றான்...!!
இப்ப என்ன பண்ணலாம்னு
யோசிச்சி... யோசிச்சி
கடைசீல வேற வழியில்லாம
ஒரு முடிவுக்கு வந்து...
நேர அந்த விவசாயி கிட்ட போறான்...
"உங்க கிட்ட தெரியாம
கை நீட்டி காச வாங்கிட்டேன்..
இந்தாங்க நீ கொடுத்த
ஐம்பது பொற்காசுன்னு திருப்பி கொடுத்துட்டுட்டான்...
உடனே அந்த விவசாயி....
அய்யயோ என்னோட நிலம்...
இன்னைய்யோட கைவிட்டு போயிடுமேன்னு
நினைச்சி புலம்ப ஆரம்பிக்கிறதுக்குள்ள...
அந்த தலைவன் செல்வந்தர்கிட்ட போய்...
"இந்தாயா நீங்க கொடுத்த
ஆயிரம் பொற்காசு"ன்னு
தூக்கி வீசிட்டு போய்ட்டான்...."
வாழ்க்கைங்றது "கண்ணாடி" மாதிரி
நாம ஒருத்தருக்கு
எதை எப்படி கொடுக்கின்றோமோ..!
அப்படி தான் அந்த விசயம்
நமக்கு திரும்பக் கிடைக்கும்...!!

written by Spark Mrl K

Sunday, 21 October 2018

அப்படி என்னத்த சொன்னார்.?


அப்படி என்னத்த சொன்னார்...


ஒரு ஊர்ல இருந்து
ரெண்டு பேர் ஒரே நேரத்துல
வீட்ட விட்டு கிளம்பி
வெளியூர் போறாங்க...

அந்த ஊர்ல இருந்து
வெளியூர் போகணும்னா...
காலைல ஒரு பஸ்...
சாயங்காலம் ஒரு பஸ்...

அத விட்ட
அஞ்சு கிலோமீட்டர் நடந்து தான் போகணும்...

ரெண்டு பேரும் ஒரே நேரத்துல
பஸ்சுக்காக காத்திருக்க...
அங்கு அமர்ந்திருந்த அந்த ஊர் பெரியவர்
அவங்கள பார்த்து கேட்குறார்....

ஏம்பா... ரெண்டு பேரும் ஒன்னா
எங்க கிளம்பிட்டீங்க..?

அதுக்கு ஒருத்தன் சொல்றான்....
நா... எப்படியாவது எதையாவது சாதிக்கணுங்கற
முடிவோட டவுனுக்கு போறேன்னு...!

உடனே இன்னொருத்தன் சொல்றான்...
நா நினைச்ச துறையில ஜெயிக்கணுங்கற
முடிவோட டவுனுக்கு போறேன்னு...!! 

இப்படி ரெண்டு பேரும் சொல்லிமுடிக்க...
பஸ் வருது...

அப்ப அந்த பெரியவர்
அவங்கள பார்த்து
ஒரு குட்டி கதை சொல்றேன்...
அத கேட்டுட்டு போங்கன்னு சொல்லி  

மனசுங்கறது...
கண்ணுக்கு தெரியாத காத்து மாதிரின்னு...
கதைய சொல்ல ஆரம்பிக்கிறார்...

உடனே
எப்படியாவது சாதிக்கணும்னு நினைக்கிறவன்...
அந்த
பெரியவர் கிட்ட
கதைய கேட்க எனக்கு நேரம் இல்ல...
நா சாதிச்சிட்டு வந்து கேட்டுக்குறேன்னு சொல்லி
வந்த பஸ்சுல ஏறிட்டான்...!

இன்னொருத்தன்
பொறுமையா கதை கேட்டதுனால...
வேற வழியில்லாம
சாயங்காலம் வரைக்கும் காத்திருந்து
அடுத்த பஸ்சுல கிளம்பி போனான்....

நாட்கள் கொஞ்சம் நகருது...

எப்படியாவது முன்னுக்கு வரணும்னு நினைக்கிறவன்...
போகுற போக்குல...
கிடைச்ச வேலைய எல்லாம் செய்யுறான்...!
அதுல கிடைச்ச காசுல வாழ்க்கைய ஓட்டுறான்..!!

இந்த வேலைதான் செய்யனும்னு நினைக்கிறவன்...
அது கிடைக்கிற வரைக்கும்
கிடைச்ச சின்ன சின்ன வேலைய செஞ்சி..!
வாழ்க்கைய ஓட்டுறான்...!!

இப்போ...
நாட்கள் வருடங்களாக மாறுது....

எப்படியாவது முன்னுக்கு வரணும்னு நினைக்கிறவன்
கிடைச்ச வேலைய முழு மனசோட செஞ்சாலும்...
அவன் இடத்துல இருந்து,
அரை அடி கூட முன்னுக்கு வர முடியல...!

ஆனா....
இப்படித்தான் முன்னுக்கு வரணும்னு நினைக்கிறவன்
கிடைச்ச வேலைய அரை மனசோட செஞ்சாலும்...
இருந்த இடந்திலிருந்து
ஒரு படி முன்னுக்கு வந்துட்டான்...!!

இத பார்த்த அவனுக்கு
ஒன்னுமே புரியல...!
அவன் மனசுல...
சின்ன தடுமாற்றம் வர ஆரம்பிக்குது..!!

என்னடா இது
இத்தனை வேலை செஞ்சும்
முன்னுக்கு வர முடியலையேன்னு...!!!

கடைசீல கடுப்பாகி
பேசாம ஊருக்கே போய்டலாம்னு தோணுது..
ஊருக்கும் கிளம்பிட்டான்...!

ஊர்ல போய் இறங்குறான்...
அந்த ஊர் பெரியவர்,
அதே பஸ்ஸ்டாப் உக்காந்திட்டு இருக்கார்...

பஸ்ஸ விட்டு இறகுனவன பார்த்து
அந்த பெரியவர் கேட்கார்...

என்னப்பா...
சொல்லிட்டு போன மாதிரியே
முன்னுக்கு வந்துட்டியா..?.

அதுக்கு அவன்
இல்லைன்னு சொல்ல

பெரியவர் ஏன்னு கேட்குறார்...

அவன் தெரியலன்னு
பதில் சொல்லிட்டு மெல்ல நடக்க ஆரம்பிச்சான்...

இருந்தாலும் அவன் மனசுக்குள்ள
சின்ன கேள்வி...!
அப்படி என்னத்த சொல்லி அனுப்பி வச்சிருப்பார்னு...!!

கொஞ்ச தூரம் நடந்தவன்
வெக்கத்த விட்டு...
பெரியவர் கிட்டையே வந்து கேட்டுட்டான்.....
அப்படி அன்னைக்கு என்னதான் சொன்னீங்கன்னு.....

அதுக்கு அந்த பெரியவர்
சிரிச்சிக்கிட்டே
நா ஒன்னும் பெருசா சொல்லல....

மனசுங்கறது காத்து மாதிரி...
நம்ம உடம்புங்கறது சின்ன படகு மாதிரி...
இப்ப நீ ஆளே இல்லாத...
ஒரு கடல்ல பயணம் பண்ண போற...!!

உன்னோட லட்சியம்...
கண்ணுக்கு தெரியாத
ஒரு தீவ கண்டுபிடிக்கிறதா இருந்தா...
முன்னோட முழு மனசும்
அந்த தீவ நோக்கியே அடிச்சா...

நீயே லேசா துடுப்பு போட்டாலே போதும்...
அந்த காற்று...
படக தீவுல போய் விட்டுடும்....

ஆனா நீ எந்தப்பக்கம்
துடுப்பு போட்டேன்னு தெரியலையே
கிளம்புன இடத்துக்கே வந்து சேர்ந்துட்டன்னு
கேட்டார்...!!!!

அவனாலா அதுக்கு பதில் சொல்ல முடியல...

இலக்கு இல்லாத எந்த பயணமும்
முடிவடையாது...!!!! 


- written by Spark MRL K (க.முரளி)