Friday, 26 October 2018

கண்ணாடி


கண்ணாடி
*************
ஒரு பெரிய செல்வந்தர்
ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற 
ஒரு விவசாய நிலத்தை அடைய நினைக்கிறான்..
அந்த நிலம் ஒன்றும் 
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அளவு இல்லை...
வெறும் ஒன்னே கால் ஏக்கர் தான்...
அதுவும் ஒரு ஏழை விவசாயியின்
கைவசம் உள்ளது...
அந்த செல்வந்தர பொறுத்தவரைக்கும்
அந்த நிலத்துக்கு அடியில இருக்குற
விலை மதிப்பற்ற புதையல் மேல
ஒரு ஆசை..!!
ஆனா நேரடியா போய் அவன்கிட்ட
அந்த நிலத்தை கேட்க
அவனுக்கு கவுரவ குறைச்சல்...
போயும்... போயும்...
ஒரு விவசாயிகிட்ட போய் பேசனுமான்னு...!!
ஆனா அந்த விசாயிக்கு, அந்த நிலத்த
விற்கவோ... கொடுக்கவோ மனம் இல்ல...!
காரணம் நிலத்து மேல விளையிற
பயிர் மேல ஒரு பாசம்...!!
எப்படியும் அந்த நிலத்த
அடைஞ்சே ஆகனும்னு அந்த செல்வந்தர்...
காசுக்காக என்ன வேணும்னாலும் செய்யக்கூடிய
ஒரு கூலிப்படை தலைவன் கிட்ட போறான்...
தான் கையில கொண்டு வந்த
ஆயிரம் பொற்காச தூக்கி வீசி....
"நீ என்ன பண்ணுவியோ...
ஏது பண்ணுவியோ...
எனக்கு தெரியாது...
எனக்கு அந்த நிலம் வேணும்"னு
சொல்லிட்டு போய்ட்டான்..!!
அது தெரியாத அந்த விவசாயி...
அதே கூலிப்படை,
தலைவன் கிட்டயே போய்...
என்கிட்ட... நா சேர்த்து வச்ச
ஒரு ஐம்பது பொற்காசு இருக்கு
அத வச்சிக்கிட்டு
என்னோட நிலத்த நீங்க தான்
பாதுகாக்கனும்னு சொல்றான்...!!
இந்த ரெண்டு பேரும்
சொல்ற நிலம்.. ஒரே நிலம்னு
அந்த தலைவனுக்கு தெரியாது..
கை நீட்டி காச வாங்கிட்டான்...
நாட்கள்
கொஞ்சம் கொஞ்சமா நகருது...
முதல்ல
செல்வந்தருக்காக நிலத்த அபகரிக்க
தன்னுடைய கூலிப்படை கும்பலோட
அந்த நிலம் இருக்கும் இடத்துக்கு
அந்த தலைவன் போறான்..
அந்த இடத்துக்கு போனா..
அந்த தலைவன பார்த்த விவசாயி..
வேக வேகமா...
"வாங்க வாங்க...
எப்படியும் எங்க நிலத்த பாதுகாக்க
நீங்க வருவீங்கன்னு தெரியும்" னு
வரவேற்க ஆரம்பிக்கிறான்...!!
உடனே கூட வந்த செல்வந்தர்...
இவன் தான்
இந்த இடத்துக்கு சொந்தக்காரன்...
இவன் கிட்ட இருந்து தான்
நிலத்த அபகரிக்கனும்னு சொல்றன்...!
அப்பத்தான் அந்த தலைவனுக்கு தெரியுது...
நாம காசு வாங்குன ரெண்டும்
ஒரே நிலத்துக்குன்னு...!!
இப்ப என்ன பண்ணனும்னு
அந்த தலைவனுக்கு புரியல...
யார் பக்கம் பேசுறதுன்னு தெரியல..
ஒருபக்கம் விவசாயி
நிலத்த பாதுகாக்க சொல்றான்...!
மறுபக்கம் செல்வந்தர்
நிலத்த புடிங்கி கொடுக்க சொல்றான்...!!
இப்ப என்ன பண்ணலாம்னு
யோசிச்சி... யோசிச்சி
கடைசீல வேற வழியில்லாம
ஒரு முடிவுக்கு வந்து...
நேர அந்த விவசாயி கிட்ட போறான்...
"உங்க கிட்ட தெரியாம
கை நீட்டி காச வாங்கிட்டேன்..
இந்தாங்க நீ கொடுத்த
ஐம்பது பொற்காசுன்னு திருப்பி கொடுத்துட்டுட்டான்...
உடனே அந்த விவசாயி....
அய்யயோ என்னோட நிலம்...
இன்னைய்யோட கைவிட்டு போயிடுமேன்னு
நினைச்சி புலம்ப ஆரம்பிக்கிறதுக்குள்ள...
அந்த தலைவன் செல்வந்தர்கிட்ட போய்...
"இந்தாயா நீங்க கொடுத்த
ஆயிரம் பொற்காசு"ன்னு
தூக்கி வீசிட்டு போய்ட்டான்...."
வாழ்க்கைங்றது "கண்ணாடி" மாதிரி
நாம ஒருத்தருக்கு
எதை எப்படி கொடுக்கின்றோமோ..!
அப்படி தான் அந்த விசயம்
நமக்கு திரும்பக் கிடைக்கும்...!!

written by Spark Mrl K

No comments:

Post a Comment