Tuesday, 8 October 2019

எதிர்காலம்


ஒரு சராசரி அப்பா அம்மாக்கு,
ஒரு அஞ்சி வயசு பையன்...
ஒரு நாள் பள்ளி முடிஞ்சி
ஆசை ஆசையா வீட்டுக்கு வாரான்...

வந்த வேகத்துல...
முதுகுல இருந்த மூட்டைய (பள்ளிக்கூட பை)
தூக்கி வீசிட்டு... சட்டைய கூட கலட்டாம...
வேக வேகமா... வெளிய போறான்....

அவன் போறத பார்த்த அப்பா..
பதரிப்போய் வெளிய வந்து பார்த்தா...
அதிர்ச்சி...!!

காரணம்...
வந்த வேகத்துக்கு... துளிகூட சம்பந்தம் இல்லாம...
பாடம் படிக்கிறத விட்டுட்டு...
ஒரு ஓரமா தெருப்பசங்களோட
விளையண்டுக்கிட்டு இருக்கான்...

இப்ப அப்பாக்கு பயம்...
பையன் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சிட்டான்...
படிக்கிறது ஆங்கில வழி கல்வி...
அதனால என்னவோ இவனுக்கு தமிழ் சுத்தமா வரமாட்டேங்குது...

மத்த பாடத்துல நூறு மார்க் வாங்கினாலும்...
இந்த ஒத்த பாடத்துல பெயில் ஆனா..
அவன் வாழ்க்கை கெட்டுப்போயிடுமேன்னு நினைக்கிறார்...

அது நியாயமான பயம் தான்...
அதுக்காக அவன டியூசன்ல சேர்க்க நினைக்கிறார்...
அதுனால... சுதந்திரமா விளையாட ஆரம்பிச்ச பையன..
அந்த இடத்துல இருந்து விடாப்பிடியா கூட்டிட்டும் போறார்...

Cut பண்ணா....
அந்த ஏரியா தமிழ் டியூசன் எடுக்குற இடம்...
மாடியில பசங்க படிக்கிற சத்தம்...
கீழ வரைக்கும் கேட்குது...!!

"காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு."

என்ற பாரதியின் பாடல் வரியை
தமிழ் ஆசிரியர் பாட...
பின்னாடியே அங்கு பாடம் படிக்கும்
மாணவர்களும் கத்தி படிக்கிறாங்க...

படிப்புதான் முக்கியம்னு...
உற்சாகமா பசங்க படிச்சாலும்...
அஞ்சி வயசு பயனுக்கு..
அங்க படிக்க துளிகூட விருப்பமே இல்ல...

பாதியில விட்டுட்டுட்டு வந்த,
விளையாட்டோட நினைப்பு...
அவன படாய் படுத்துது...

அதையெல்லாம் பெருட்படுத்தாத..
அவனோட அப்பா...
அவனுடைய எதிர்காலம் கருதி...
டியூசன்ல சேர்த்துவிட்டுட்டு...
ஏதோ சாதிச்ச மாதிரி போக...

பெத்த அப்பாவே
நம்ம சுதந்திரத்துல கை வச்சிட்டர்ன்னு...
வேண்டா விருப்பா...  உம்முன்னு அவன் உக்காந்திருக்க...

பாரதி பாடலின் அடுத்த இரண்டு வரி...
அஞ்சி வயது சிறுவனின் எதிர்காலத்திற்காக ஒலிக்குது...!

மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா....

Written by
Spark Mrl K (க.முரளி)

No comments:

Post a Comment