ஒரு ஊர்ல..
ஒரு பணக்காரன் வாழ்ந்து வந்தான்...
அவன் கிட்ட... காசுன்னு யாராவது கேட்டு வந்தா...,
கையில் இருக்குறது...
செல்லாத அஞ்சி பைசாவா இருந்தாலும்...
அத பத்திரப்படுத்தி... ஒளிச்சி வச்சிட்டு...
காசே இல்லைன்னு சொல்லி திருப்பி அனுப்பிடுவான்..!
அவனுக்குன்னு இருக்குறது ஒரே பொண்ணு.
வயது இப்பதான் பத்த எட்டி பார்க்குது...
அவன் சேர்த்து வைக்கிறது,
பதிக்கி வைக்கிறது எல்லாமே...
அவனோட ஒரே பொண்ணுக்கு மட்டும் தான்...
திடீர்ன்னு ஒருநாள்...
அந்த ஊர்ல பஞ்சம்... தலைவிரிச்சி ஆடுது...
காட்டுல விளைச்சலும் இல்ல...!
மக்களுக்கு வேலையும் இல்ல...!!
உண்ண உணவும் சரியா கிடைக்கல...!!!
அந்த ஊர் மக்கள் பஞ்சத்துல தவிக்கிறாங்க..,
ஆனா.. அவன் வீட்டுக் குடோன்ல மட்டும்
உணவுக்கு பஞ்சமே இல்ல...!
அப்ப ஊர்க்காரங்களாம் ஒன்னு கூடி...
ஒரு முடிவுக்கு வாராங்க...
அந்த பணக்காரன பார்த்து...
எப்படியாவது கொஞ்சம் பணத்த கடனா வாங்கி...
இந்த ஊர பஞ்சத்துல இருந்து காப்பாத்திடலாம்னு..!
ஆனா... வெக்கத்த விட்டு கை நீட்டி பணம் கேட்ட மக்கள... அந்த பணக்காரன் கை விட்டுட்டான்...
அப்ப அவனோட பத்து வயசு பொண்ணு...
அப்பாவ பார்த்து...
அவங்களாம் பாவம் தான... பணம் கொடுத்தா தப்பாப்பா..? என்று கேட்க...
உடனே பணக்காரன் தன்னுடைய மகளிடம்...
பணம் கொடுக்குறது தப்பில்லம்மா....
ஆனா... பஞ்சத்துல அடிபட்டவங்க அந்த பணத்த திருப்பி தரமாட்டாங்களே...!
அது தப்புதான...?
என்று புத்திமான் மாதிரி பேசுவான்...
இப்ப...
நாட்கள் கொஞ்சம் கொஞ்சமா நகருது...
அந்த ஊர்ல... பஞ்சாயத்து எலக்சன் வருது...
ஒரு நல்ல தலைவன் வரனும்னு மக்கள் நினைக்கிறாங்க...
அதுல ஜெயிச்சே ஆகனும்னு பணக்காரன் நினைக்கிறான்..
உடனே... தன்னோட குடோன்ல இருக்குற உணவுப்பொருட்களில்...
ஒரு சில வாரத்தில் காலாவதியாகக்கூடிய (expiry date முடியக்கூடிய)
பொருட்கள தனியா பிரிச்சி...
ஊர் மக்களுக்கு தானமா கொடுக்குறான்...!
வேற வழியில்லாம அவங்களும் வாங்கிட்டு போறாங்க...!!
அதைப்பார்த்த அவனோட பொண்ணு...
ஏம்ப்பா... நீ பாட்டுக்கு எடுத்து கொடுக்குறியே...
அவங்க தா எதையுமே திருப்பி தரமாட்டாங்களே...
அப்படினா நீங்க பண்றது தப்புதான...?
உடனே அவன் தன்னுடைய மகளிடம்...
எப்படியும் ரெண்டு மூணு வாரத்துல
இந்த உணவுலாம் கெட்டுப்போயிடும்...
அதுக்குலாம் Expiry date முடியப்போகுது பாப்பா..!
ஆனா அவங்க மட்டும் நமக்கு ஓட்டுப்போட்டுட்டா....
என்று சொல்லி முடிப்பதற்குள்...
அந்த பொண்ணு அப்பாவை குறுக்கிட்டு...
அப்படினா நீங்க பதிக்கி வச்சிருக்குற பணத்துலையும்
Expiry date போட்டு இருந்தா....
அன்னைக்கே எடுத்து கொடுத்திருப்பீங்களாப்பா..?
என்று குழந்தைத்தனமாக கேட்க...
அதற்கு அந்த புத்தினாமால்...
பதில் கூற முடியவில்லை...!!!
Written by
Spark MRL K (க.முரளி)
😍 😍 😍 சூப்பர் 👌 👌 👌 முரளி அவர்களே
ReplyDeleteநன்றிகள் பல
ReplyDelete