Wednesday, 30 October 2019

காதல் சொல்லும் விதம்...


இந்தக் காலத்துலையும்...
பழைமை மாறாத ஒரு பொண்ணு...!

அம்மா, அப்பா இல்லாம,
ஆசிரமத்துல வளர்ந்ததால...
எதுலையும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருப்பா..!!

பார்ப்பதற்கு தேவதை போல் இருப்பதால்..,
யாராவது.. இவ அநாதை தான..?
வாழ்கை கொடுக்கிறேன்னு சொன்னா..!!
வேண்டாம்னா சொல்லுவா.? ன்னு
எத்தைனோ பேர் வந்து கேட்டும்...
அவ ஒருத்தனையும் ஏத்துக்கல...!!!

அப்படிப்பட்ட பொண்ண
ஒரு மூணு பேர் காதலிகிறாங்க...

ஒருத்தன்...
மூளைய மட்டும் மூலதானமா
வச்சி செயல்படுறவன்...!

இன்னொருத்தன்...
மனசுக்கு சரின்னு பட்டா...
அத உடனே பண்ணிடுவான்...!!

மூன்றாமவன்
மனசுக்கு சரின்னுபட்டா...
அத சிந்திச்சி... அப்புறமா செயல்ல இறங்குறவன்...!!!

ஒரு நாள் அவ கிட்ட...,
அந்த மூணுபேரும் தன்னோட
காதல சொல்ல கிளம்பிட்டாங்க...!

மனசுக்கு சரின்னு பண்றவன்
முதல போறான்...
அவகிட்ட... நீ இல்லாம என்னால
வாழ்வே முடியாது முடியாதுன்னு சொல்றான்..!

உடனே அவ...
அப்ப, இத்தன நாளா...
நா இல்லாம செத்தா போயிருந்தேன்னு சொல்லிட்டா...!!

அடுத்தது,
மூளைய மட்டும் நம்புறவன் போறான்...
அவன் கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கிறேன்னு..

என்னுடைய குழந்தைக்கு அம்மாவா
நீ இருப்பியா..? ன்னு கேட்டுட்டான்...!

உடனே அவ,
எங்க ஆசிரமத்துல... அப்பா இல்லாம,
நிறையா குழந்தைங்க இருக்கு...
அதுல ஒரு குழந்தைக்கு
நீ அப்பாவா இருப்பியான்னு கேட்டு...

அந்த ரெண்டு பேர் கிட்டயும்...
எனக்கு.. இன்னைக்கு இருக்குற
நவீன காதல்ல நம்பிக்கை இல்லைன்னு சொல்லி...
அனுப்பி வச்சிட்டா...!!!

இந்த ரெண்டையும் பார்த்துட்டு...
இப்ப கடைசியா
மூன்றாமவன் போறான்...
சிம்ப்ளா ஒன்னு சொல்றான்...
அவளும் அதுக்கு சரின்னு சொல்லிட்டா...!!

அத பார்த்த மத்த ரெண்டு பேருக்கும்
ஒரே குழப்பம்..!!!
அப்படி என்னெத்த சொல்லி
அவள சம்மதிக்க வச்சான்னு..???

ஆனா... அவன் பெருசா ஒன்னும் சொல்லல...!!

முதல்ல போன.. நீங்க ரெண்டு பேரும்...
அவளுக்கு புதுசா ஒரு வாழ்க்கை,
கொடுக்கனும்னு நினைச்சீங்க...!!!

ஆனா, கடைசியா போன நான்..
அவகிட்ட இல்லாத ஒரு விசயத்தை...
கொடுக்குறேன்னு சொன்னேன்..!

"எனக்கு சின்ன வயசுல இருந்து
அம்மா, அப்பா இருக்காங்க...
ஆனா மனசுக்கு பிடிச்ச மனைவி இல்ல...!!

அதுனால, அவங்கள நீ எடுத்துக்கிட்டு...
எம்மன்சுக்கு பிடிச்ச மனைவியா...
நீ வருவியான்னு கேட்டேன்..!!"

அவளும் சரின்னு சொல்லிட்டா..!!!

இதுக்கு பேர்தான் பண்டம் மாற்று முறை...!
பழைமை மாறாதது...!!

Written by
Spark Mrl K (க.முரளி)


No comments:

Post a Comment