சென்னையில ஒரு முக்கிய சாலை...
பகல் முழுக்க... எத்தனையோ வாகனங்கள்
அதில் சென்றாலும்.....
இரவு 12 மணிக்கு மேல்...
ஒரே ஒரு சைக்கில் மட்டும்
அந்த சாலைய ஆட்சி பண்ணுது...!!
எப்பவுமே அந்த சைகிள சுத்தி
குறைஞ்சது பத்து பேராவது
சுத்தியிருப்பாங்க...
எல்லோரும் வருவாங்க...
பத்து ரூபாய்க்கு வாங்கி குடிச்சிட்டு
போயிருவாங்க....
அந்த இடத்துல எப்பவுமே
அண்ணே ரெண்டு டீ...
அண்ணே ஒரு டீ ன்னு
எப்பவுமே சத்தம் கேட்டுட்டே இருக்கும்...!
அந்த சைக்கிளுக்கு சொந்தக்கார பெரியவர்...
பகல் முழுக்க தூங்கிவிட்டு...
இரவானதும் சைக்கிளில் டீ விற்க
மறக்காம வந்துடுவார்...
அவருக்கு போலீஸ்னா கொஞ்சம் பயம்...
காரணம்...
பல சமயம் இவர் கிட்டயே
டீ வாங்கி குடிச்சாலும்...
சில சமயம்...
கூட்டம் போடாத...
கிளம்பு கிளம்புன்னு சொல்லி...
அந்த இடத்துல இருந்து
துரத்தி விட்டுடுவாங்க...!!
இப்படித்தான் ஒரு நாள் இரவு
அவர் வழக்கம் போல சைக்கிளில்
டீ வித்துட்டு இருக்க..!!!
அந்த பக்கமா பைக்கில் வந்த போலீஸ்காரர்
அவர துரத்தி விட....
அவரும் வேற வழியில்லாம...
அங்கிருந்து கொஞ்ச தூரம் தள்ளி
மறுபடியும்... டீ விற்க ஆரம்பிக்கிறார்...!
போன போலீஸ் திரும்பி வரும்போது...
அவர் டீ விற்கிறத பார்த்துக் கடுப்பாகி...
“ஏவ் பெருசு...
நா அவ்வளவு சொல்லியும்...
ரோட்டுல கூட்டம் சேர்த்துட்டு இருக்க...
கடைய காலி பண்ணுயா...”
என்று கோபமாக சொல்ல
அங்க டீ குடிக்க வந்தவாங்க முன்னாடி
அவருக்கு கொஞ்சம்
அவமானமா போயிடுச்சி...!!
உடனே அந்த பெரியவர்...
“அதான் கடை போடுறதுக்கு தினமும்
உங்களுக்கு வாடகை (மாமுல்) கொடுக்குறேனே...
ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கோங்க...
டீ காலியாகப் போகுது..!
நானே கிளம்பிடுவேன் சார்...
என்று சொல்லி முடிக்கிறதுக்குள்ள...
அந்த போலீஸ்காரர் கோவப்பட்டு
கையிலிருந்த குச்சியால
ஓங்கி ஒரு அடி அடிச்சி...
சைக்கிள பிடுங்கி ஸ்டேஷன்ல நிறுத்திட்டு...
காலைல 10 மணிக்கு வந்து எடுத்துக்கோன்னு
சொல்லிட்டு போயிட்டார்...
அந்த பெரியவருக்கு...
இத்தன நாள் சோறு போட்ட அந்த சைக்கிள..
ஸ்டேஷன்ல தனியா விட்டுட்டுப்போக
மனசு வரல...!!
இப்ப.. வேற வழியில்லாம அந்த பெரியவர்...
அந்த ஸ்டேஷன் வாசல்லையே
விடிய விடிய காத்திருந்து...
காலைல 10 மணிக்கு ஸ்டேஷன்ல
கையெழுத்துப்போட்டு... சைக்கிள வாங்கி...
வீட்டுல போய் நிம்மதியா படுத்தா...
தூக்கம் வர மாட்டேங்குது...
மன உளைச்சல் அதிகமாகுது.
மணி இப்ப 12...
இதுக்கப்புறமும் ஒழுங்கா தூங்கலைனா...
நைட் கண்ணு முழிக்க முடியாதுன்னு...
மன உளைச்சலுக்கு மருந்து வாங்க
டீ வித்த காச எடுத்துக்கட்டு
ஒயின்ஷாப்க்கு போறார்...
அங்க ஒரே கூட்டம்...
இருந்தாலும் பரவாயில்லன்னு
கூடத்தோட கூட்டமா போய் நின்னு
வாங்கலாம்னு நிற்கும் போது...
அங்கயும் அவருக்கு சப்புன்னு ஒரு அடி விழுது....
திரும்பிப்பார்த்தா..
அங்க ஒரு போலீஸ்...
கடைக்கு வந்த குடிமகன்களை
ஒழுங்க வருசையில நின்னு வாங்கிட்டு
போங்க மாட்டீங்களான்னு திட்ட ஆரம்பிக்கிறார்...!!
காரணம்... கொஞ்ச நேரத்துகு முன்னாடி...
கடையில ஏதோ பிரச்சினைன்னு
கம்ப்ளைன்ட் போயிருக்கு...!
அதுனால...
இரவு டீக்கடைய காலிபண்ண வந்த
போலீஸ்... இங்க காவலுக்கு வந்திருக்கு...!!
இப்ப வேற வழியில்லாம....
விடிய விடிய காவல்நிலையத்தில்
காத்திருந்த மன உளைச்சலப் போக்க
ஒயின்ஷாப்பின் வரிசையில் காத்திருக்கிறார்
அந்த பெரியவர்...!!
Written by
Spark Mrl K (க.முரளி)
குறிப்பு : மன உளைச்சலுக்கு மருந்து.. குடி கிடையாது.. இக்கதைக்கு தேவைப்பட்டதால் சேர்துள்ளேன். நன்றி
No comments:
Post a Comment