Tuesday, 19 November 2019

காகாவுக்கு சோறு வச்சிட்டியா..?


ஒரு நாட்ட சிங்கராஜா என்ற  
ஒரு அரசன் ஆண்டு வந்தான்... 

தன்னோட பேருக்கு ஏத்த மாதிரி 
கம்பீரமான நடை... 
எதிரியை வேட்டையாடும் குனம்... 
என எல்லாம் அவன்கிட்ட இருந்துச்சி...

சுத்தியிருக்குற சின்னச் சின்ன நாட்ட... 
தன்னோட படை பலத்தைப் 
பயன்படுத்தி.. கட்டுப்பாட்டுல வச்சிருந்தான்... 

அதுனாலயே அந்த ராஜாவுக்கு...
எதிரிங்க அதிகமா இருந்தாங்க...!! 

சிங்கராஜாங்கற அந்த பேருல...
சிங்கம்னு இருக்குறதால... 
என்னவோ தெரியல...

சிங்கம் காட்டுல தன்னோட உணவ.. 
வேட்டையாடி திங்குறமாதிரி....

இவரும் தன்னோட உணவ 
வேட்டையாடித்தான் தின்பார்...

அதுக்காகவே அந்த அரசன்...
தன்னோட அரண்மனையில... 
வேட்டையாடிய உணவை சமைக்க... 
பிரத்யோகமா ஒரு சமையல்காரனை 
வேலைக்கு வச்சிருக்கார்... 

அடிக்கடி அந்த சமையல்காரன் கிட்ட 
சிங்கராஜா ஒரு விஷயத்த 
திரும்பத் திரும்ப சொல்லுவார்... 

அதாவது... என்னென்னா...

நான் இன்னைக்கு 
உயிரோட ஆரோக்கியமா இருக்கான்னா...!!
அது என்னோட முன்னோர்கள் 
செஞ்ச புண்ணியம்...!! 

அதுனால... 
தினமும் சமைக்கிற உணவுல...
கொஞ்சம் எடுத்து... 
என்னோட முன்னோர்களான 
பித்ருக்களுக்கு (காகம்) படைச்சதுக்கு 
அப்புறம் தான்.... 
எனக்கு வைன்னு சொல்லுவார்...!!!

ராஜா சொன்னதுனால... 
அந்த சமையல்காரனும் 
தினமும் தான் சமைக்கிற உணவ... 
காகத்துக்கு வச்சிட்டுத்தான் 
ராஜாவுக்கு வைப்பான்...

அவன் தினமும் சோறு வைப்பதால்... 
அங்க சாப்பிட வரும் காகம் அனைத்தும்... 
அந்த சமையல்காரன் கூட 
நல்லா பழக ஆரம்பிச்சிடுச்சி...!! 

அவன் மூணுவேளையும் 
உணவு கொடுக்குறதால...., 
அந்த காக்கா எல்லாம் அவன 
கடவுளாவே பார்க்க ஆரம்பிச்சிடுச்சி... 

காரணம்... 
அந்த காகத்த பொறுத்த வரைக்கும்.. 
ராஜா சோறு வைக்கல...! 
அவன் தான் சோறு வைக்கிறான்...!! 

அந்த சமையல்காரனுக்கும் 
காக்காவுக்கு சோறு வைக்கிறதுல 
அளவுக்கு அதிகமான சந்தோசம்...

காரணம்...  
பறவைகளுக்கு தன் கையாள 
உணவு அளிக்கிரதுனால....
தனக்கு கண்டிப்பா புண்ணியம் சேரும்... 

அந்த புண்ணியம் 
தன்னோட வருங்கால சந்திகளை 
ராஜா மாதிரியே ஆரோக்கியமா 
வாழ வைக்கும்னு....
அவன் முழுசா நம்புறான்...!!

ஆனா....
இது எல்லாத்துக்கும் மேல...
ஒரு உண்மைய சொல்லனும்னா...!

 அந்த ராஜா... 
தன்னோட சமையல்காரன் உட்பட 
யாரையுமே நம்பாம... 

எதிரிங்க எப்படி வேணும்னாலும் 
உள்ள வரலாம்... 
சோத்துல விசம் வச்சுக்ழ்கூட
தன்ன கொல்ல பார்க்கலாம்னு...

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய 
காகத்துக்கு சோறு வச்சி... 
அது சாகலேன்னா... 

அதுக்கப்புறம் அந்த சோத்த 
அவன் சாப்ட்டுட்டு... 
ஆரோக்கியமா உயிர் வாழலாம்னு... 
வாழ்ந்துட்டு இருக்கான்...!!!

இது தெரியாத சமையல்காரன்...
தினமும்... 
கா..கா..கான்னு கத்தி கத்தி சோறு வைக்க...

அந்த காக்கா... அத சாப்ட்டுட்டு... 
சோறு வைக்கும் சமையல்காரனுக்கு...
நன்றி சொல்லும் விதமாக...

பதிலுக்கு
கா.. கா.. கான்னு கத்திட்டு போச்சாம்...

நம்மல்ல பலபேர்...

அந்த சமையல்காரன் மாதிரி
உதவி செஞ்சிக்கிட்டு...!

அந்த காக்கா மாதிரி
நன்றி சொல்லிக்கிட்டும் தான்
வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்...!!

குறிப்பு : என்னையும் சேர்த்து

Written by
Spark Mrl K (க.முரளி)

நன்றி (வாசித்தமைக்கு)


No comments:

Post a Comment