ஒரு பெரிய நகரம்...
அங்கிருந்து 5 மைல் தூரத்துல,
ஒரு சின்ன கிராமம்...
இந்த ரெண்டு ஊருக்கும் இடையில்...
ஒரே ஒரு வண்டிப்பாதை மட்டும் இருக்கு...
அந்த கிராமத்துல வாழுற மக்கள்...
ஏதாவது பொருள் வாங்கணும்னா...
அந்த வண்டிப்பாதையா பயன்படுத்திதான்
நகரத்துக்குப் போகமுடியும்...!
அந்த வண்டிப்பாதையில் ஒரு ஆலமரம்...
ரொம்ப வருஷமா... எங்கயும் போகாம...
அங்கயே வாழ்ந்துட்டு இருக்கு...!
அந்த மரத்துக்குப் பக்கத்துல...
ஊர் பொதுக் கோவில் ஒன்னு இருக்கு...
அந்த பாதையில... டவுனுக்குப் போகுற...
ஊர்காரங்க எல்லோரும்...
அந்த கோவில்ல சாமி கும்பிட்டுட்டு...
கொஞ்ச நேரம்.... அந்த மரத்தடியில... வெயிலுக்கு இதமா...
உக்காந்து என்திரிச்சிட்டுத்தான் போவாங்க...!
ஒரு நாள் சரியான மழை...
அந்த வண்டிப்பாதை முழுக்க
குண்டும் குழியுமா ஆகி...
அதுல தண்ணி தேங்க ஆரம்பிச்சிடுச்சி...!
அன்னைக்கு அந்த வழியா
சைக்கில்ல வந்தவங்க...
பைக்கில வந்தவங்க...
எல்லோரும்... கொஞ்சம் இல்ல...
ரொம்பவே கஷ்டப்பட்டாங்க... !!
அதுக்கடுத்த நாள்...
அந்த ஊர்ல இருக்குற பொதுமக்கள்
ஒன்னு கூடி ஒரு முடிவெடுத்து...
எங்க ஊருக்கு...
தார் ரோடு போடணும்னு...
அரசாங்கத்துக்கு மனு போட்டாங்க...
நாட்கள் நகர ஆரம்பிச்சது...
ஆனா... தார் ரோடு போடா..
எந்த நடவடிக்கையும் நடக்கல..!!
அதைத்தொடர்ந்து...
ஊர்மக்கள் போராட்டத்துல இறங்கி...
ஒருவழியா ரோடு போட..
அரசாங்கத்த ஒத்துக்க வச்சாங்க...!!
இப்ப ரோடு போடுற அதிகாரி...
சாலைய பார்வையிட வந்தார்...!
வந்தவர் ஊர் மக்கள் கிட்ட...
ரோடு போடுறதுக்கு,
வண்டிப்பாதையில இருக்குற ஆலமரம்
இடைஞ்சலா இருக்கு...!
ஒன்னும் மரத்த வெட்டனும்...!!
இல்லைனா அந்த கோவில இடிச்சி வேற இடத்துல கட்டனும்...!!!
என்ன பண்ணலான்னு சொல்லுங்க..? ன்னு
கேட்கார்.....
அதுக்கு அந்த ஊர்க்காங்க,
எல்லோரும் ஒன்னுகூடி...
கோவில இடிச்சா...
சாமிக்குத்தம் வந்து...
எங்க ஊர்... மழை தண்ணி இல்லாம
கஷ்டப்படும்னு...
எப்படி பார்த்தாலும் கொஞ்ச நாள்ல..
குண்டு குழியுமா ஆகுற...
அந்த ஊழல் தார் சாலைய போடுறதுக்கு...!
பூமிக்கு மழைய தரும் அந்த மரத்தை... வெட்டிடுங்கன்னு சொல்லிட்டு போயிட்டாங்க...
அந்த ஊர்க்காரங்க...!!!
அந்த ஊர்க்காரங்க...!!!
"மழை தரும் கடவுள்...!
மரம் மட்டுமே...!!"
Written by
மரம் மட்டுமே...!!"
Written by
Spark Mrl K (க.முரளி)
No comments:
Post a Comment