பத்து வருஷத்துக்கு முன்னாடி
ஒரு பையன்...
ஒரு பொண்ண ரொம்ப நாளா
ஒன் சைடா லவ் பண்றான்...!
எத்தனையோ தடவ...
தன்னோட காதல சொல்லனும்னு,
அவ கிட்ட போய்...
சொல்லத் தைரியம் இல்லாம..,
திரும்பி வந்திருக்கான்...!!
அந்த பொண்ணோட வீட்டுல...
அவளுக்குன்னு ஒரு தனி அறை உண்டு..!
அந்த அறையில இருக்குற...
ஜன்னல் வழியா...
அவ வெளியுலகத்தை பார்த்து
ரசிக்கும் போதெல்லாம்
அங்கிருக்கும் சாலையோரம் நின்று...
அந்த பெண்ணையே பார்த்து
அவன்... தனக்குள்ளேயே சிரிப்பான்...
ஒரு நாள்...
அந்த பொண்ணு வீட்டுல...
அவளுக்கு மாப்பள பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க...
அத தெரிஞ்சிக்கிட்ட அந்த பையன்...
இனிமே காத்திருந்தா...
இன்னொருத்தன் அவள கூட்டிட்டு போயிடுவான்னு...,
தைரியத்த வரவழச்சிக்கிட்டு...
காதல சொல்ல கிளம்பிட்டான்...!!!
அன்னைக்கிருந்த கால கட்டத்துல...
ஒரு பையன் தன்னோட காதல சொல்லனும்னா...???
சரியோ...! தவறோ...!!
அவனுக்கு தெரிந்த வார்த்தையை
கவிதையாக எழுதி...
ஒரு காதல் கடிதமா (LOVE LETTER)
அவகிட்ட கொடுக்கணும்...!!!
அதே மாதிரி... அந்த பையனும்...
தன்னுடைய...
இடது கையில... ஒரு பேப்பரா பிடிச்சி...
வலது கையாள... பேனாவ எடுத்து...
ஜன்னலோரம் இருக்கும் அந்த
பொண்ண பார்த்துக்கிட்டே
கவிதை எடுத்த ஆரம்பிக்கிறான்...!
அந்த பையன்...
அந்த பொண்ண பார்த்துக்கிட்டே
எழுத ஆரம்பிச்சாலும்.....
அவன் எழுதுற பேப்பர் என்னவோ...
கவிதை எழுதுற பேனாவை
மட்டும் தான் பார்க்குது...!
காரணம்... அந்த பேனா...
பேப்பர் கிட்ட மட்டும் தான்...,
எழுத்து வடிவத்துல பேசுது....!!
அந்த பையன் கவிதைய
எழுத... எழுத...
பேப்பருக்கு பேனா மீது
ஒரு ஈர்ப்பு வர ஆரம்பிக்க...
இறுதியாக...
இந்த கவிதை வேண்டும் என்றால்...
உன்னை வர்ணித்து....
நிலவோடும், சந்திரனோடும் ஒப்பிட்டு....
பொய்யாக எழுதியிக்கலாம்...!
ஆனால் என் காதல் நிஜம்...!!
என்று எழுதி முடித்த அடுத்த நொடி...
அந்த பேப்பருக்கு... பேனாவின் மீது
காதலே வந்துவிட்டது...!!!
இருந்தும் வேறு வழியில்லாமல்...
தன்னுடைய காதலை மறைத்து...
தன் காதலனை (பேனாவை) பிரிந்து
அவனுடைய காதலை வெளிப்படுத்த
அந்த காகிதம்... காதல் கடிதமாக
அந்தப் பெண்ணிடம் சென்றது...
Written by
Spark MRL K (க.முரளி)
No comments:
Post a Comment