ஒரு காட்டுல
ஒரு பிணம் திங்கிற கழுகும்
கம்பீரமான சிங்கமும் வாழ்ந்து வந்துச்சாம்...
அந்த கழுகு எப்பவுமே...
அந்த சிங்கம் வேட்டையாடி சாப்ட்டு
மிச்சம் வச்சத (இறந்த உடலை) சாப்பிட...
அந்த சிங்கம் இருக்குற இடத்துக்கு
அடிக்கடி வந்து போகும்...
அத பாக்குற சிங்கம்...
எலக்காரம சிரித்தபடி...!
வெக்கமே இல்லாம... இப்படி
என்னோட எச்சி சோத்துக்கு வாரியே...??ன்னு
கேட்கும்...!
அதுக்கு அந்த கழுகு...
சிங்கத்துக்கிட்ட
நா எச்சி சோத்துக்கு வரல...
நீங்க தின்னுட்டு மிச்சம் வச்சத
சுத்தம் பண்ண வந்திருக்கேன்னு...
சொல்லும்...!!
ஒரு நாள்...
இதே மாதிரி சாப்பிடும் போது...
அந்த கழுக பார்த்து சிங்கம்
ஏளனமாக பேச...
பதிலுக்கு கழுகும் ஏதோ சொல்ல...
அந்த இரண்டுக்கும் இடையே
சின்ன வாக்குவாதம் ஏற்பட்டுச்சி....
ஆரம்பத்துல...
சின்னதா ஆரம்பிச் வாக்குவாதம்...
போகப் போக அதுவே
தன்மானப் பிரச்சினையா மாற ஆரம்பிச்சது...
தான் வேட்டையாடி...
மிச்சம் வைக்கிற எச்சிய...
சாப்புடுற பிணம் தின்னிக்கழுகைப்
பார்த்து... சிங்கம் சொல்லுச்சி...
மவனே... நீ மட்டும்,
என் கையில சிக்குன...!!!!
உன்ன... ஒரே அடியில அடிச்சி...
கொன்னுடுவேன்...!!!
அதுக்கு அந்த பிணம் திங்கிற கழுகு
பறந்துக்கிட்டே சொல்லுது...
நீ என்னடா என்ன கொல்லுறது..!
என்னைக்கு இருந்தாலும் ஒரு நாள்...
இந்த காட்டுல நீ....
அநாதையா செத்துக்கிடப்ப...!!
அன்னைக்கு உன்னோட கறிய தின்னு...
என்னோட வயித்துல ஜீரணமாக்கி...
அடுத்த நாள் உன்ன...
இந்த பூமிக்கு உரமா தூவிட்டுப் போறேன்னு
சாவால் விட்டுச்சி...!!!
இப்படியே... சண்டையில
நாட்கள் போய்க்கிட்டு இருக்க...
அந்த சிங்கத்துக்கும் கழுகுக்கும்
வயசும் கூடிட்டுப் போச்சி...
இப்ப... முன்ன மாதிரி அந்த சிங்கத்தால...
வேட்டையாடவும் முடியல...
உண்ண உணவும் சரியா கிடைக்கல...!!
ஒரு நாள் அந்த காட்டுக்கு
மிருகங்கள பிடிக்க...
ஒரு வேட்டைக்காரன் வாரான்...
அவன் ஒரு கூண்ட ரெடி பண்ணி...
அதுல வெட்டி வச்ச ஆட்டுக்கறிய,
முழுசா கட்டி தொங்க விடுறான்....
அந்த கரியோட வாசனைக்கு...
பசியில இருக்குற சிங்கம்...
ஆசைப்பட்டு உள்ள போய் மாட்டிக்குது
இப்ப அந்த சிங்கத்துக்கு வேற வழியில்ல...!
தப்பிக்க உடம்புல தெம்பு வேணும்னா...
அந்த ஆட்டுக்கறிய தின்னு தா ஆகணும்.!
அத பார்த்த கழுகு...
பழைய பகைய மனசுல வச்சிக்கிட்டு
அந்த சிங்கத்துக்கிட்ட....
உன்ன...
காட்டுக்கே ராஜான்னு சொல்றாங்களே...
வெக்கமே இல்லாம...
எவனோ வெட்டி வச்ச கறிய...
திங்கிறியேன்னு கேட்க
ஏற்கனவே கடுப்புல இருந்த சிங்கம்
அந்த கழுக பார்த்ததும் சூடாகி
கூண்டுக்குள்ள இருக்கறதையும் மறந்து
இப்பவும் சொல்றேன்... ரொம்ப பேசுன...
உன்ன அடிச்சே கொன்னுடுவேன்னு
கோபமா சொல்லுது...!
உடனே அந்த கழுகு
கூண்டுக்கு பக்கத்துல போய்...
எங்க... இப்ப என்ன அடிச்சி
கொல்லு பார்க்கலாம்னு
கேலி பண்ணுது...!!!
நேரம் ஆகிக்கிட்டே போக
கூண்ட வச்சிட்டுட்டு போன
வேட்டைக்காரன் திரும்பி வரும்
நேரமும் நெருங்கி வருது....
சிங்கம் எவ்வளவோ முயற்சி பண்ணியும்
அதோட உடல் பலத்தால... கூண்ட
உள்ள இருந்து திறக்க முடியல்...
அந்த கழுகு நினைச்சா வெளிய இருந்து
திறக்க முடியும்...
ஆனா... இப்ப கழுகு கிட்ட உதவி கேட்ட
பகைய மனசுல வச்சிக்கிட்டு
பண்ணவும் செய்யாது..
அப்படியே அது செய்ய வந்தாலும்...
அது சிங்கத்துக்கு அசிங்கம்னு
நினைச்சி...
தன்னோட கவுரவத்துக்கும்...
பங்கம் வரக்கூடாது..
அதே நேரத்துல தப்பிக்கணும்னு....
தீவிரமா... யோசிக்க ஆரம்பிக்குது...
அத பார்த்த கழுகு... சிங்கத்திடம்
கூண்ட திறக்காம... அப்படி என்னத்த தீவிரமா யோசிக்கிற...?
உடனே...அந்த சிங்கம்...
சிரிச்சிட்டே கழுக பார்த்து சொல்லுச்சி...
இல்ல...அன்னைக்கு என்னமோ சொன்னயே...???
நா செத்ததுக்கு அப்புறம்...
என்ன தின்னு...
உன்னோட வயித்துல ஜீரணமாக்கி...
அடுத்த நாளே...
இந்த பூமிக்கு உரமா தூவிடுவேன்னு...
சவால்லாம் கூட விட்டியே...!!!
இனிமே... நீ நினைச்சாலும்...
நா செத்ததுக்கு அப்புறம்
உன்னால.... என்ன திங்க முடியாது...!!
செத்தாலும் நா சிங்கம் டா...!!
உன்னோட அசிங்கம் இல்ல..!!ன்னு
கூண்டுக்குள்ள இருந்துக்கிட்டே
கர்ஜனையிலை சொல்லுச்சி...!!
அத கேட்ட கழுகு... சிங்கத்த பார்த்து...
கூண்டுக்குள்ள இருக்குற உனக்கே..
இவ்வளவு திமிர் இருந்தா..?
எனக்கு எவ்வளவு இருக்கும்...???
தன்னோட சவால நிறைவேத்த...
நீ செத்தா.. என்னோட வயித்துல தான்
ஜீரணம் ஆகணும்னு....
கூண்ட திறந்து விட்டுச்சி...
உடனே அந்த சிங்கமும்...
அத நா... செத்ததுக்கு அப்புறம் பார்க்கலாம்னு..
அங்கிருந்து வேகமா... கிளம்பி போயிடுச்சி...!!
சில இடங்களில்... உடல் வலுவ விட
மூளையின் வலு அதிகம்...
Written by
Spark Mrl K (க.முரளி)
நன்றி (வாசித்தமைக்கு)
No comments:
Post a Comment