சில நூறு வருசத்துக்கு முன்னாடி
சந்திரபுரம் என்ற தேசத்தை...
சூரியவரதன்ங்கற சூழ்ச்சிக்கார அரசன்
ஆண்டு வந்தான்...
அவனோட பொழுது போக்கே...
மக்கள் மனசுல ஆசையை தூண்டிவிடும்படி
பெரிய பரிசுத்தொகையோட
ஒரு போட்டியை அறிவிச்சி....
அதுல தோல்வியடையும் போட்டியாளர...
தூக்குல போட்டு சந்தோஷப்படுவது தான்...!
அப்படி தோற்றவர்களை...
தூக்கில் போடுவதற்கென்றே
முரட்டுத்தனமான ஒரு அடிமுட்டாளை...
வேலைக்கு வச்சிருந்தான் அந்த அரசன்.!
அந்த அடிமுட்டாள் சில சமையம்
மனம் இறங்கி... தோற்றவர்களை
கொல்லாமல் விட்டு விடுவதால்....
நீ அவர்களை சொர்க்கத்துக்கு அனுப்பும்
புனிதமான வேலை செய்கிறாய்
என்று சொல்லி... அந்த அரசன்
அடிமுட்டாளை நம்ப வைத்திருந்தான்....
அடிமுட்டாளும்....
அரசனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு
தோற்றவர்களை பார்த்து....
நீ இங்கிருந்து கஷ்டப்படுவதற்கு பதில்
செத்து சொர்கத்திலாவது
சந்தோஷமாக இரு... என்று கூறியபடி
தூக்கில் போட்டுவிடுவான்....
இப்படி இருக்கும் போது ஒருநாள்...
அரசனோட மனசுல...
வித்யாசமான ஆசை ஒன்னு தோணுது...
அதாவது...
நாம ஆசைப்படுற ஒரு விஷத்தை
நமக்காக... ஆசை ஆசையாய்...
நிறைவேத்த நினைக்கும் போது...
அத நம்ம மனசு....
வேண்டாம்னு சொல்லுற ஒன்னு இருக்கா...?
அப்படி ஒரு விஷயம் இருந்தா...,
அதை கண்டுபிடிச்சி கொடுக்குறவனுக்கு
இந்த ராஜியத்தையே பரிசாக கொடுத்து...
அரசனாக்குகிறேன்.... என்று
பொதுமக்கள் மத்தியில அறிவிக்கிறான்.
காரணம்... எப்படியும்
அத யாரும் கண்டுபிடிக்க போறது இல்ல...!
அப்படியே கண்டுபிடிச்சாலும்...,
அந்த விசயத்த...
நா வேண்டாம்னு சொல்லப்போறது இல்ல...!
அதுனால...
எவனும் ஜெயிக்க போறதும் இல்லைன்னு
ஒரு நினைப்பு...!!!
இந்த போட்டியை அறிந்த
நாட்டு மக்கள் எல்லோரும்....
யாராவது இதுல ஜெயித்து
இந்த அரசனை...
தோற்கடிக்க மாட்டாங்களான்னு
நினைக்க...
ஒருத்தன் மட்டும் போட்டியில
கலந்துக்க தயாராகுறான்....!!
போட்டி நடக்கும் நாளும் வருது...
போட்டியாளர் அரசபைக்கு வருகிறார்...
அரசனைப் பார்த்து...
உங்களுக்கு பிடித்த உணவின்
பெயர்களை சொல்லுங்கள் என்று கேட்க...
உடனே அரசனும்...
தனக்குப் பிடித்த உணவின் பெயரை
பட்டியலிட்டு வரிசையாகக்கூற...
அந்த உணவு அனைத்தும்
அரசன் முன் கொண்டுவரப்படுகிறது...
இப்ப... அந்த போட்டியாளர்
ராஜாவை பார்த்து....
அரசே... உங்க ஆசை தீரும் வரை
இத சாப்பிடுங்க என்று கேட்க...
அரசனும் சாப்பிட ஆரம்பிக்க...
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல
சாப்பிட முடியாமல்... போதும்னு சொல்றார்....
ஆனாலும் போட்டியாளர் விடல....
அரசே... இவை அனைத்தும் தங்களுத்தான்
சாப்பிடுங்கள் என்று ஆசை ஆசையாய் கூற...
உடனே அரசன்....
வயிறு நிரம்பிவிட்டது..
போதும்னு சொல்லிட்டேனே என்று கூற....
போட்டியாளர்... அரசனிடம்
உணவில் மட்டும் தான் அரசே....
ஆசைப்படும் பண்டம் கண்முன் இருந்தும்...
போதும் என்று சொல்லும் மனம் வரும்
என்று கூற....
அரசன்...
போட்டியாளரை பார்த்து...
புத்திசாலித்தனமாக
நான் போதும் என்று கூறினேனே தவிர...
வேண்டாம் என்று கூறவில்லையே...?!?
இவை அனைத்தும் எனக்குத்தான்...!
பசி எடுக்கும் போது... நானே சாப்பிடுகிறேன்...
இப்ப நீ தோற்றுவிட்டாய்....
என்று கூறி...
யார் அங்கே... இவனை...
அந்த அடிமுட்டாளிடம் அனுப்பி
பொதுமக்கள் மத்தியில்
தூக்கிலிட சொல்லுங்கள்...
இந்த நாட்டிற்கு அரசனாக துடிக்கும்
அனைவருக்கும் இதுதான் கதி என்று
எல்லோருக்கும் புரியட்டும்...
என்று கூற
அந்த அடிமுட்டாளும்...
"செத்தாவது சொர்க்கத்தில்
சந்தோஷமாக இரு"... என்று சொல்லி
தூக்கில் போட்டுவிட்டான்.!
அதை கண்ணால் பார்த்த
மக்கள் அனைவரும் அதிருப்தியில்
இவன்லாம் ஒரு அரசனா....
இவ்வளவு அநியாயம் பண்றானே...
இவனுக்குலாம் நல்ல சாவே வராது...
செத்தா சொர்க்கத்துக்கு போகமாட்டான்..!
நரகத்துக்கு தான் போவான்...
என்று புலம்ப ஆரம்பிக்க....
அரசன் மக்களை பார்த்து
அடுத்து போட்டியில் கலந்துகொள்ள
துடிக்கும் அடிமுட்டாள் யாராவது இருக்கீங்களா..?
என்று கர்வமாக கேட்க...
கேட்ட அடுத்த நொடியே....
அரசனிடம் வேலை செய்யும்
அடிமுட்டாள்....
அரசனின் முன் வந்து நிற்க...
அரசன் அடிமுட்டாளைப் பார்த்து...
நான் அடிமுட்டாள் இருக்கீங்களான்னு
உன்ன கூப்பிடல மடையா...!
போட்டியில் கலந்துக்க போறாங்களானு
கேட்டேன்..!!.
அப்படியே நீ போட்டியில கலந்துக்கிட்டா...
அப்புறம் உன்ன யாரு தூக்குல போடுவா..?
என்று நக்கலாக கேட்க...
அரசபையில் உள்ள அனைவரும்...
சிரிகிறார்கள்...
அவமானத்தில் தலைகுனிந்த
அந்த அடிமுட்டாள்... அரசனிடம்
அரசே...
அரசனாகும் ஆசை எல்லாம் எனக்கு இல்லை...
ஒரு சின்ன சந்தேகம்...
அத கேட்டுட்டு போக வந்தேன்...
என்று கூற....
என்ன சந்தேகம்..?
மக்கள் அனைவரும்...
நீங்க செத்தா... நரகத்துக்கு தான்
போவீங்கன்னு சொல்றாங்க...!!
உங்களுக்கு...
சொர்க்கத்துக்கு போக ஆசையா..?
இல்ல... நரகத்துக்கு போக ஆசையா..?
என்று வெகுளியாக அடிமுட்டாள் கேட்க...!
உடனே அரசன்... சிரித்தவாறே...
இதிலென்ன சந்தேகம் முட்டாளே...
யாராக இருந்தாலும்..,
சொர்க்கத்துக்கு செல்லத்தான்...
ஆசைப்படுவார்கள்.. என்று கூற...
அடுத்த வினாடியே..
அந்த அடிமுட்டாள்...
அரசனைப் பார்த்து...
அப்படினா... உடனே என் கூட வாங்க...
இப்பவே உங்கள தூக்குல போட்டு...
சொர்க்கத்துக்கு அனுப்பி வச்சிடுறேன்...
என்று கூற...
அதைக்கேட்ட அரசன் கோபத்தில்...
யார் அங்கே...
இந்த அடிமுட்டாளை அடித்து துரத்துங்கள்
என்று கத்த....
என்ன அரசே....
சொர்க்கத்துக்கு போக ஆசைப்படுறீங்க...
அந்த ஆசையா நிறைவேத்த
சாக சொன்னா...
வேண்டாம்னு நினைக்கிறீங்க...
செத்தாத்தான சொர்க்கத்துக்கு போக முடியும்...
என்று அழுத்திக் கூற...
அரசன் கேட்ட கேள்விக்கு...
இப்ப பதில் கிடைத்து விட்டது.
வேறு வழியின்றி
அடிமுட்டாள் அரசனாகிறான்.....
இருந்தும்....
தான் அரசன் ஆன பின்பு கூட...
தன்னுடைய பழைய அரசனின்
ஆசையை நிறைவேற்ற...
அவனை தூக்கில் தொங்க விட்டான்
அந்த அடிமுட்டாள்.
செத்தாவது சொர்க்கத்தில்
சந்தோஷமாக இரு... என்று....
*********
எதை விதைத்தாயோ...
அதன் வழியே அறுபடுவாய்...
*********
Written_by
Spark Mrl K (க.முரளி)
Nice story. வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி...
Deleteஅருமை senior 👏
ReplyDeleteநன்றி தம்பி
ReplyDeleteWaiting for your next story na
ReplyDeleteமிக்க நன்றி தம்பி
Delete