ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடைய,
உயிர் பிரியும் போது...
அவனோட கடைசி ஆசைய
நிறைவேத்த நினைக்கின்ற மாதிரி...!!
ஆரம்ப காலத்துல.... கடவுள்...
எல்லா உயிரையும் படைக்கும் போது....
அந்த உயிருக்குன்னு...
ஏதாவது ஆசை இருக்கான்னு தெரிஞ்சி...
அத நிறைவேத்த நினைக்கிறார்...
அப்படி இருக்கும் போது ஒரு நாள்
ஒரு மூணு உயிர கூப்ட்டு
உங்க மூணு பேரையும்...
பூமிங்கற கிரகத்துல...
உயிரினமா படைக்கப் போறேன்...!
அங்க உங்கள விட...,
பலம் வாய்ந்த உயிரினமும் இருக்கும்....!
பலம் குறைந்த உயிரினமும் இருக்கும்...!!
அதேசமையம்....
படு மோசமான மனித இனமும் இருக்கு...!!!
எப்படியும்... நீங்க...
பிறந்ததுல இருந்து... சாகுற வரைக்கும்...
போராடித்தான் வாழ்க்கைய ஓட்டனும்..!
வேற வழியே இல்ல...!!
அதுனால...
உங்களுக்குன்னு ஏதாவது ஆசை இருந்தா...?
அத என்கிட்ட சொல்லுங்க...
நா... நிச்சயம் நிறைவேத்தி வைக்கிறேன்னு
சொல்ல....
முதல் உயிர் சொல்லுது...
நா தேவையில்லாம எந்த உயிரினத்துக்கும்
தொந்தரவு கொடுக்க மாட்டேன்...!
ஆனா... என்ன யாராவது அடிக்க வரும்போது...
நா... என்னோட உயிரை காப்பாத்துறதுக்காக
அவங்கள கடிச்சா...
அவங்க உயிர் பிழைக்கிறதே
கஷ்டமான காரியமா இருக்கணும்
என்று சொல்ல...
உடனே கடவுள்....
உன்னோட ஆசை நியாயமானது தான்...!
நீ ரொம்ப நல்லவனா இருக்க...!!
அதுனால உனக்கு...
நல்ல பாம்புன்னு பேரு வைக்கிறேன்...!
இனிமே... பூமியில
உன்னோட விருப்பப்படி நீ பிறக்கலாம்
என்று கூற
இப்ப இரண்டாவது உயிர் சொல்லுது...
நா யாரையும் கடிக்கலாம் விரும்பல...!
ஆனா... தப்பு பண்றவங்கள
என்ன வச்சி..., அடிச்சி அடிச்சே திருத்தணும்...!!
என்று சொல்ல
உடனே கடவுள்....
உன்னோட ஆசையும் நியாயமானது தான்
உனக்கு பிரம்புக் குச்சின்னு பேர் வச்சி....
பிரம்புத் தாவரமா படைச்சிடுறேன்...!
என்று கூற...
இத ரெண்டையும் கேட்ட மூணாவது உயிர்...
இவனுங்க ரெண்டு பேரும் லூசுப்பயலுக...
கடவுளே நம்மகிட்ட இறங்கி வந்து கேட்கும் போது...
இப்படியா கேட்பானுங்க...?
என்று சொல்லியபடி
நா யாரவேனும்னாலும் கடிப்பேன்...!
ஆனா... என்ன யாராவது அடிச்சா...,
அடிச்ச அவனுக்குத்தான் வலிக்கணும்...
என்று...
தன்னோட ஆசைய மூணாவது உயிர் சொல்ல...
அதைக்கேட்ட கடவுள் கடுப்பாகி...
உன்னோட ஆசை...
கொஞ்சம் வில்லங்கமா இருக்கே..?
என்று கேட்க
உடனே அந்த மூணாவது உயிர் சொல்லுது...
அதுல எந்த வில்லங்கம் வந்தாலும்
பரவாயில்ல... நா பாத்துக்கிறேன்...!!!
என்றதும்...
அந்த வில்லங்கம் வந்தபிறகு...
உன்னால எதையும் பார்க்கமட்டும் இல்ல...
தப்பிக்கிறதுக்கு யோசிக்கக் கூட முடியாது...
என்று சொல்லி முடிப்பதற்குள்...
அத எதையும் காதுல வாங்காம...
இப்ப என்னோட ஆசைய...
நிறைவேத்த முடியுமா.? முடியாதா..?
என்று கேட்க
வேற வழியில்லாமல்...
கொடுத்த வாக்க காப்பாத்துறதுக்காக
கடவுளும் அந்த ஆசைய நிறைவேத்துறார்..!!
இப்ப அந்த மூணு உயிரும்
பூமியில உயிரினமாக படைக்கப்படுது..
மத்த ரெண்டு உயிரும்...
தன்னோட ஆசை எப்படியும்..,
இந்த பூமியில நிறைவேறிடும்...!
என்ற நம்பிக்கையில வாழ ஆரம்பிக்குது...!!
ஆனா மூணாவது உயிர் மட்டும்
அத எப்படியாவது சோதிச்சி பார்க்கனும்னு
நினைச்சி... சுத்தி முத்தி பார்க்குது....
அங்கு ஒரு மனிதன்
அமைதியா உக்காந்திருக்க
பார்க்க அம்மாஞ்சியா இருக்கான்..?
இவன போய்... கடவுள்
படு மோசமானவன்னு சொல்றாரு...?
என்று தனக்குத்தானே சிரித்தபடி
இவன்தான்டா நம்மளோட வேட்டைன்னு
யாருக்கு தெரியாம மெதுவா...
பதிங்கி பதிங்கி கிட்ட போய்...
அவன நறுக்குன்னு ஒரு கடி கடிக்க...
கடிச்ச அடுத்த நொடியே...
அந்த இடத்துல
ஓங்கி சொத்து ஒரு அடி விழுது...
அடிச்ச அடியில...
சுத்தி இருக்குற எதையும் பார்க்க முடியாம...
அந்த மூணாவது உயிர் செத்து விழ...
இந்த கொசு கடிச்சத விட...
அத ஓங்கி அடிச்சதுல தான்டா
நமக்கு பயங்கரமா வலிக்குது
எம்மா... அந்த கொசு பேட்ட எடு...
என்று கூறியபடி
இன்னும் பல உயிர்களை அழிக்கச் சென்றது...!
கடவுள் கூறிய...,
அந்த படு மோசமான உயிரினம்...!!
written by MURALI K
நன்றி 🙏வாசித்தமைக்கு
Keep it up anna
ReplyDeleteஉங்கள் அன்பிற்கு நன்றி தம்பி
Delete