Wednesday, 30 October 2019

காதல் சொல்லும் விதம்...


இந்தக் காலத்துலையும்...
பழைமை மாறாத ஒரு பொண்ணு...!

அம்மா, அப்பா இல்லாம,
ஆசிரமத்துல வளர்ந்ததால...
எதுலையும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருப்பா..!!

பார்ப்பதற்கு தேவதை போல் இருப்பதால்..,
யாராவது.. இவ அநாதை தான..?
வாழ்கை கொடுக்கிறேன்னு சொன்னா..!!
வேண்டாம்னா சொல்லுவா.? ன்னு
எத்தைனோ பேர் வந்து கேட்டும்...
அவ ஒருத்தனையும் ஏத்துக்கல...!!!

அப்படிப்பட்ட பொண்ண
ஒரு மூணு பேர் காதலிகிறாங்க...

ஒருத்தன்...
மூளைய மட்டும் மூலதானமா
வச்சி செயல்படுறவன்...!

இன்னொருத்தன்...
மனசுக்கு சரின்னு பட்டா...
அத உடனே பண்ணிடுவான்...!!

மூன்றாமவன்
மனசுக்கு சரின்னுபட்டா...
அத சிந்திச்சி... அப்புறமா செயல்ல இறங்குறவன்...!!!

ஒரு நாள் அவ கிட்ட...,
அந்த மூணுபேரும் தன்னோட
காதல சொல்ல கிளம்பிட்டாங்க...!

மனசுக்கு சரின்னு பண்றவன்
முதல போறான்...
அவகிட்ட... நீ இல்லாம என்னால
வாழ்வே முடியாது முடியாதுன்னு சொல்றான்..!

உடனே அவ...
அப்ப, இத்தன நாளா...
நா இல்லாம செத்தா போயிருந்தேன்னு சொல்லிட்டா...!!

அடுத்தது,
மூளைய மட்டும் நம்புறவன் போறான்...
அவன் கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கிறேன்னு..

என்னுடைய குழந்தைக்கு அம்மாவா
நீ இருப்பியா..? ன்னு கேட்டுட்டான்...!

உடனே அவ,
எங்க ஆசிரமத்துல... அப்பா இல்லாம,
நிறையா குழந்தைங்க இருக்கு...
அதுல ஒரு குழந்தைக்கு
நீ அப்பாவா இருப்பியான்னு கேட்டு...

அந்த ரெண்டு பேர் கிட்டயும்...
எனக்கு.. இன்னைக்கு இருக்குற
நவீன காதல்ல நம்பிக்கை இல்லைன்னு சொல்லி...
அனுப்பி வச்சிட்டா...!!!

இந்த ரெண்டையும் பார்த்துட்டு...
இப்ப கடைசியா
மூன்றாமவன் போறான்...
சிம்ப்ளா ஒன்னு சொல்றான்...
அவளும் அதுக்கு சரின்னு சொல்லிட்டா...!!

அத பார்த்த மத்த ரெண்டு பேருக்கும்
ஒரே குழப்பம்..!!!
அப்படி என்னெத்த சொல்லி
அவள சம்மதிக்க வச்சான்னு..???

ஆனா... அவன் பெருசா ஒன்னும் சொல்லல...!!

முதல்ல போன.. நீங்க ரெண்டு பேரும்...
அவளுக்கு புதுசா ஒரு வாழ்க்கை,
கொடுக்கனும்னு நினைச்சீங்க...!!!

ஆனா, கடைசியா போன நான்..
அவகிட்ட இல்லாத ஒரு விசயத்தை...
கொடுக்குறேன்னு சொன்னேன்..!

"எனக்கு சின்ன வயசுல இருந்து
அம்மா, அப்பா இருக்காங்க...
ஆனா மனசுக்கு பிடிச்ச மனைவி இல்ல...!!

அதுனால, அவங்கள நீ எடுத்துக்கிட்டு...
எம்மன்சுக்கு பிடிச்ச மனைவியா...
நீ வருவியான்னு கேட்டேன்..!!"

அவளும் சரின்னு சொல்லிட்டா..!!!

இதுக்கு பேர்தான் பண்டம் மாற்று முறை...!
பழைமை மாறாதது...!!

Written by
Spark Mrl K (க.முரளி)


Friday, 11 October 2019

திடீர் பஞ்சம்



ஒரு ஊர்ல..
ஒரு பணக்காரன் வாழ்ந்து வந்தான்...
அவன் கிட்ட... காசுன்னு யாராவது கேட்டு வந்தா...,

கையில் இருக்குறது... 
செல்லாத அஞ்சி பைசாவா இருந்தாலும்...
அத பத்திரப்படுத்தி... ஒளிச்சி வச்சிட்டு...
காசே  இல்லைன்னு சொல்லி திருப்பி அனுப்பிடுவான்..!

அவனுக்குன்னு இருக்குறது ஒரே பொண்ணு.
வயது இப்பதான் பத்த எட்டி பார்க்குது...

அவன் சேர்த்து வைக்கிறது,
பதிக்கி வைக்கிறது எல்லாமே...
அவனோட ஒரே பொண்ணுக்கு மட்டும் தான்...

திடீர்ன்னு ஒருநாள்... 
அந்த ஊர்ல பஞ்சம்... தலைவிரிச்சி ஆடுது...

காட்டுல விளைச்சலும் இல்ல...!
மக்களுக்கு வேலையும் இல்ல...!!
உண்ண உணவும் சரியா கிடைக்கல...!!!

அந்த ஊர் மக்கள் பஞ்சத்துல தவிக்கிறாங்க..,
ஆனா.. அவன் வீட்டுக் குடோன்ல மட்டும்
உணவுக்கு பஞ்சமே இல்ல...!

அப்ப ஊர்க்காரங்களாம் ஒன்னு கூடி...
ஒரு முடிவுக்கு வாராங்க... 
அந்த பணக்காரன பார்த்து... 
எப்படியாவது கொஞ்சம் பணத்த கடனா வாங்கி...
இந்த ஊர பஞ்சத்துல இருந்து காப்பாத்திடலாம்னு..!

ஆனா... வெக்கத்த விட்டு கை நீட்டி பணம் கேட்ட மக்கள... அந்த பணக்காரன் கை விட்டுட்டான்...

அப்ப அவனோட பத்து வயசு பொண்ணு... 
அப்பாவ பார்த்து...
அவங்களாம் பாவம் தான... பணம் கொடுத்தா தப்பாப்பா..? என்று கேட்க...

உடனே பணக்காரன் தன்னுடைய மகளிடம்...
பணம் கொடுக்குறது தப்பில்லம்மா.... 
ஆனா... பஞ்சத்துல அடிபட்டவங்க அந்த பணத்த திருப்பி தரமாட்டாங்களே...!
அது தப்புதான...?
என்று புத்திமான் மாதிரி பேசுவான்...

இப்ப... 
நாட்கள் கொஞ்சம் கொஞ்சமா நகருது... 
அந்த ஊர்ல... பஞ்சாயத்து எலக்‌சன் வருது...
ஒரு நல்ல தலைவன் வரனும்னு மக்கள் நினைக்கிறாங்க...
அதுல ஜெயிச்சே ஆகனும்னு பணக்காரன் நினைக்கிறான்.. 

உடனே... தன்னோட குடோன்ல இருக்குற உணவுப்பொருட்களில்... 
ஒரு சில வாரத்தில்  காலாவதியாகக்கூடிய (expiry date முடியக்கூடிய) 
பொருட்கள தனியா பிரிச்சி... 
ஊர் மக்களுக்கு தானமா கொடுக்குறான்...!
வேற வழியில்லாம அவங்களும் வாங்கிட்டு போறாங்க...!!

அதைப்பார்த்த அவனோட பொண்ணு... 

ஏம்ப்பா... நீ பாட்டுக்கு எடுத்து கொடுக்குறியே... 
அவங்க தா எதையுமே திருப்பி தரமாட்டாங்களே... 
அப்படினா நீங்க பண்றது தப்புதான...? 

உடனே அவன் தன்னுடைய மகளிடம்... 

எப்படியும் ரெண்டு மூணு வாரத்துல
இந்த உணவுலாம் கெட்டுப்போயிடும்... 
அதுக்குலாம் Expiry date முடியப்போகுது பாப்பா..!
ஆனா அவங்க மட்டும் நமக்கு ஓட்டுப்போட்டுட்டா....
என்று சொல்லி முடிப்பதற்குள்... 

அந்த பொண்ணு அப்பாவை குறுக்கிட்டு... 

அப்படினா நீங்க பதிக்கி வச்சிருக்குற பணத்துலையும்
Expiry date போட்டு இருந்தா.... 
அன்னைக்கே எடுத்து கொடுத்திருப்பீங்களாப்பா..?
என்று குழந்தைத்தனமாக கேட்க...

அதற்கு அந்த புத்தினாமால்... 
பதில் கூற முடியவில்லை...!!!

Written by
Spark MRL K (க.முரளி)

Tuesday, 8 October 2019

எதிர்காலம்


ஒரு சராசரி அப்பா அம்மாக்கு,
ஒரு அஞ்சி வயசு பையன்...
ஒரு நாள் பள்ளி முடிஞ்சி
ஆசை ஆசையா வீட்டுக்கு வாரான்...

வந்த வேகத்துல...
முதுகுல இருந்த மூட்டைய (பள்ளிக்கூட பை)
தூக்கி வீசிட்டு... சட்டைய கூட கலட்டாம...
வேக வேகமா... வெளிய போறான்....

அவன் போறத பார்த்த அப்பா..
பதரிப்போய் வெளிய வந்து பார்த்தா...
அதிர்ச்சி...!!

காரணம்...
வந்த வேகத்துக்கு... துளிகூட சம்பந்தம் இல்லாம...
பாடம் படிக்கிறத விட்டுட்டு...
ஒரு ஓரமா தெருப்பசங்களோட
விளையண்டுக்கிட்டு இருக்கான்...

இப்ப அப்பாக்கு பயம்...
பையன் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சிட்டான்...
படிக்கிறது ஆங்கில வழி கல்வி...
அதனால என்னவோ இவனுக்கு தமிழ் சுத்தமா வரமாட்டேங்குது...

மத்த பாடத்துல நூறு மார்க் வாங்கினாலும்...
இந்த ஒத்த பாடத்துல பெயில் ஆனா..
அவன் வாழ்க்கை கெட்டுப்போயிடுமேன்னு நினைக்கிறார்...

அது நியாயமான பயம் தான்...
அதுக்காக அவன டியூசன்ல சேர்க்க நினைக்கிறார்...
அதுனால... சுதந்திரமா விளையாட ஆரம்பிச்ச பையன..
அந்த இடத்துல இருந்து விடாப்பிடியா கூட்டிட்டும் போறார்...

Cut பண்ணா....
அந்த ஏரியா தமிழ் டியூசன் எடுக்குற இடம்...
மாடியில பசங்க படிக்கிற சத்தம்...
கீழ வரைக்கும் கேட்குது...!!

"காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு."

என்ற பாரதியின் பாடல் வரியை
தமிழ் ஆசிரியர் பாட...
பின்னாடியே அங்கு பாடம் படிக்கும்
மாணவர்களும் கத்தி படிக்கிறாங்க...

படிப்புதான் முக்கியம்னு...
உற்சாகமா பசங்க படிச்சாலும்...
அஞ்சி வயசு பயனுக்கு..
அங்க படிக்க துளிகூட விருப்பமே இல்ல...

பாதியில விட்டுட்டுட்டு வந்த,
விளையாட்டோட நினைப்பு...
அவன படாய் படுத்துது...

அதையெல்லாம் பெருட்படுத்தாத..
அவனோட அப்பா...
அவனுடைய எதிர்காலம் கருதி...
டியூசன்ல சேர்த்துவிட்டுட்டு...
ஏதோ சாதிச்ச மாதிரி போக...

பெத்த அப்பாவே
நம்ம சுதந்திரத்துல கை வச்சிட்டர்ன்னு...
வேண்டா விருப்பா...  உம்முன்னு அவன் உக்காந்திருக்க...

பாரதி பாடலின் அடுத்த இரண்டு வரி...
அஞ்சி வயது சிறுவனின் எதிர்காலத்திற்காக ஒலிக்குது...!

மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா....

Written by
Spark Mrl K (க.முரளி)