Friday, 3 March 2017

தத்துவம் - 2017




இரண்டு பெரிய ஞானிகளின் 
புத்திசாளி சீடர்கள்...
ஒருத்தர ஒருத்தர் 
ஒரு சாலையில் சந்திச்சுக்கிறாங்க...

அப்ப ஒரு பெரியவர் 
அவங்க கிட்ட பிச்சைகேட்க வாரார்...

"
ஐயா தர்மம் எதாவது போடுங்க சாமின்னு"

ஒருத்தன் சொல்றான்....

எங்க குரு அடிக்கடி சொல்லுவார்...
நாம எப்பவும் 
நெருப்பு மாதிரி இருக்கனும்...
ஏன்னா...?

"
அதுதான் எப்பவும் 
நிமிர்ந்து நிற்கும்...!"

இல்லைனா நாமளும் ஒருகாலத்துல 
இந்தமாதிரி பிச்சை எடுக்க வேண்டிய நிலமை 
வந்தாலும் வந்திடும்னு...


உடனே 
இன்னொருத்தன் சொல்றான்

"
இல்ல எங்க குரு சொல்லுவார்...
நாம தண்ணீர் மாதிரி
எப்பவும் மேலிருந்து கீழே 
இறங்கி போக கத்துக்கனும்...

ஏன்னா..?
அதுதான் கொதிச்சி எரியிற 
நெருப்பக்கூட ஈசியா அனைச்சிடும்னு...

அதனால 
இவருக்கு பிச்சை போடுறதுல்ல தப்பில்லா...!

உடனே அவன் சொல்றான்...

நெருப்பு நினைச்சா 
தண்ணீர கூட ஆவியாக்கி மேலே அனுப்பிடுமனு...

உடனே இவன்
ஆனா அந்த ஆவியும் குளிந்தவுடனே
மீண்டும் தண்ணீரா மாறிடும்னு

இப்படி மாறி மாறி பேசினதுல்ல 
ரெண்டு பேருக்கும் சண்டை முத்திப்போச்சி....

இவங்க ரெண்டு பேரும் 
பிச்சை போடுவாங்களா மாட்டாங்களான்னு
ரெம்ப நேரமா பார்த்துட்டு இருந்த 
அந்தப் பெரியவர்....

டேய்... முட்டாப்பயலுகளா...
அடுத்தவன் உபதேசம்
அவன் அவன் இஷ்ட்டத்துக்குத்தான் இருக்கும்...!

முதல்ல
"
நீ... நீயா இரு..."ன்னு
ஒரு பெரிய்ய தத்துவத்த சொல்லிட்டு 
திரும்பி பார்க்காம போய்ட்டார்...

written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment