Thursday, 2 March 2017

வயசுக்கு வந்த பொண்ணு



அன்றொரு நாள்...

"
அவ வயசுக்கு வந்துட்டா
இனிமே வெளிய
வர மாட்டா..."

அவ அம்மா 
சொன்ன வார்த்தை இது..

அந்த தெருவுல 
ஒரே ஒரு பொண்ணுதான்..
மத்ததெல்லாம் பசங்க...

சின்ன வயசுல இருந்து
ஒன்னா இருந்ததுனால
ஒன்னாவே விளையாடுவோம்...

மண்ண சோறாக்கி
தண்ணிய குழம்பாக்கி
அவ சமைச்சி போடுவா...

திடீர்னு ஒருநாள்
அவ வயித்த பிடிச்சி 
அழுததுனால அதுல இருந்து
அவ பெரிய மனுசியாம்...

இனிமே அவள பார்க்கனும்னா
ஒளிஞ்சு நின்னுதான் பார்க்கனும்...

அவ்வளவு பாதுகாப்பு அவளுக்கு...

வயசு ஒன்னும் 
பெருசா ஆகல அவளுக்கு
அப்பதான் பத்து ஆனது..

அந்த காலத்துல 
அவங்க ஆயா வயசுக்கு வர
பதினெட்டு வயசாச்சாம்..

அது அவங்க
தாத்தாட்ட பாட்டி
பேசும் போதுதான் எங்களுக்கே
தெரியும்..
என்ன ஆச்சர்யம்...

பள்ளிக்கூடத்துக்கு கூட 
தனியாத்தான் அனுப்புவாங்க...

முறையில
அவ எனக்கு அத்தை பொண்ணு...

அதுவரைக்கும் எனக்கு 
ஒன்னும் தோணல அவ மேல...

வயசும் அதிகமாச்சு...
விவரம் 
கொஞ்சம் கொஞ்சமாத்தான்
தெரிய வந்தது....

ஒரு சின்ன ஆசை...
இனிமே காலம் முழுக்க
அவ கையால சாப்பிடனும்னு...
இது தப்பில்லேன்னு தோனுச்சி..

ஒரு நாள் அவகிட்ட
நேரடியாவே கேட்டுட்டேன்...

"
நீ சமைச்ச மண் சோறும்
அந்த தண்ணிக் குழம்பும் 
இனி எப்ப கிடைக்கும்"னு..

அதுக்கு அவ சொன்ன 
பதில்...
ஒரு சின்ன 
வெக்கம் கலந்த சிரிப்புமட்டும்தான்...

அப்புறம் 
"
போடா"ன்னு சொல்லிட்டு 
ஓடி போய்ட்டா....

எனக்கு அவள பிடிச்சிருக்கு..
அவளுக்கும் என்னை பிடிச்சிருந்தது...

காலப்போக்கில் 
இருவீட்டார் சம்மதத்துடன் 
கல்யாணமும் நடந்தது....

ஆனா...
நான் என்ன பாவம் 
செஞ்சேன்னே தெரியல...

அன்னைக்கு நான் சொன்னதுனால
இன்னைக்கு வரைக்கும் மனுசி
என்ன சமைச்சாலும்..

சோறு மண்ணு மாதிரிதான் இருக்கு..
குழம்பு தண்ணியாத்தான் இருக்கு...

'
ஏன்டி'ன்னு கேட்டா
இப்பலாம் மொறைக்கிறா...

written by க.முரளி (spark MRL K)

No comments:

Post a Comment